யாழ் குடாநாட்டில் பால் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளோர் ஊக்குவிக்கப்பட வேண்டும்!  – டக்ளஸ் தேவானந்தா

Monday, May 30th, 2016

யாழ் குடாநாட்டில் பால் உற்பத்தியானது மிகவும் வீழ்ச்சி கண்டுள்ள நிலையில், அதனை அபிவிருத்தி செய்து ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி.)யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள், கிராமியப் பொருளாதார அமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளார்.

இவ் விடயம் தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள செயலாளர் நாயகம் அவர்கள், நாட்டில் பால் உற்பத்தியில் தன்னிறைவு காணும் நோக்கில் 90,000 பால் உற்பத்தியாளர்களை உருவாக்க கிராமியப் பொருளாதார அமைச்சு திட்டமிட்டுள்ளதாகத் தெரிய வருகிறது.

இந்த நிலையில், யாழ் குடாநாட்டில் அண்மைக் காலமாக பால் உற்பத்தியானது பாரிய வீழ்ச்சி நிலையை அடைந்துள்ளதாகத் தெரிய வருகிறது. எனவே, இத்துறையைக் கட்டியெழுப்ப உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

யாழ் குடாநாட்டில் பால் உற்பத்தி தொடர்பில் உற்பத்தியாளர்கள் ஊக்குவிக்கப்படுவதுடன், அவர்களுக்கான அனைத்து உதவிகளும் செய்து கொடுக்கப்பட வேண்டும். அத்துடன், சிறந்த முறையில் மேய்ச்சல் தரைகளை ஏற்படுத்தி அவற்றைப் பராமரிக்கக்கூடிய வழிவகைகளையும் மேற்கொள்ள வேண்டுமென செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: