யாழ்ப்பாணம் நெடுந்தூர தனியார் பேருந்து நிலையத்தை திறந்துவைத்து சேவைகளை ஆரம்பித்து வைத்தார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Wednesday, January 27th, 2021

யாழ்ப்பாணம் முனீஸ்வரன் வீதியில்  அமைக்கப்படுள்ள நெடுந்தூர தனியார் பேருந்து நிலையம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் இன்றையதினம் (27) மக்கள் பாவனைக்காக அதிகாரபூர்வமாக திறந்துவைக்கப்பட்டது.

யாழ் மாவட்டத்திலிருந்து வெளிமாவட்டங்களிற்கு செல்லும் தனியார் பேருந்துகள் தரித்து நிற்பதற்கு உரிய இடம் இல்லாமல் இருந்துவந்த நிலையில் அதனை நிவர்த்தி செய்யும் வகையில் குறித்த கட்டடம் நிர்மாணிக்கப்பட்டது.

இந்நிலையிலேயே இன்றையதினம் குறித்த நெடுந்தூர தனியார் பேருந்து நிலையத்தை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சம்பிரதாயபூர்வமாக நாடா வெட்டி திறந்துவைத்து சேவைகளை ஆரம்பித்து வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

முன்பதாக பல வருடங்களாக யாழ்ப்பாணம் மின்சார நிலைய வீதியின் வைத்தியசாலை பின் பகுதியிலேயே வெளிமாவட்டங்களிற்கான தனியார் பேருந்துகள் தரித்திருந்து தமது சேவைகளை முன்னெடுத்து வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

சாரதி பயிற்சிகளின்போது சாரதிகளின் அறிவு, திறன், எண்ணங்களின் கூட்டிணைவுகள் தொடர்பிலும் அவதானங்கள் எடு...
மனுஸ் தீவில் உயிரிழந்த யாழ் இளைஞரின் சடலம் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் ஏற்பாட்டில் இலங்கைக்கு கொண்டுவ...
கவனிப்பாரற்றுக் கிடக்கின்றன தீவக வைத்தியசாலைகள் - நாடாளுமன்றில் டக்ளஸ் எம். பி சுட்டிக்காட்டு!

சாரதி பயிற்சிகளின்போது சாரதிகளின் அறிவு, திறன், எண்ணங்களின் கூட்டிணைவுகள் தொடர்பிலும் அவதானங்கள் எடு...
தணிக்கை தகர்க்கவும், தர்மம் காக்கவும் வேண்டும் - நூலாசிரியருக்கு செயலாளர் நாயகம் வாழ்த்து!
கம்பஹா, பௌத்தலோக மாவத்தையில் இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தின் விற்பனை நிலையம் கடற்றொழில் அமைச்சர...