கம்பஹா, பௌத்தலோக மாவத்தையில் இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தின் விற்பனை நிலையம் கடற்றொழில் அமைச்சரால் ஆரம்பிப்பு!

Monday, March 22nd, 2021

கம்பஹா, பௌத்தலோக மாவத்தையில் இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தின் விற்பனை நிலையம் ஒன்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் இராஜாங்க அமைச்சர் கஞ்சன விஜேசேகர ஆகியோரினால் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது

இதனிடையே கொழும்பு, மட்டக்குளியில் அமைந்துள்ள நாரா எனப்படும் தேசிய நீரியல் வள ஆராய்ச்சி நிறுவனத்தில் புதிய பணியாளர்களுக்கு நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளது.

நாரா நிறுவனத்தின் தலைவர் பேராசிரியர் நவரட்ணராஜா தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இராஜாங்க அமைச்சர் கஞ்சன விஜேசேகர மற்றும் அமைச்சின் செயலாளர்கள் அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

யாழில் பலரைப் பாதித்துவரும் தென்னிலங்கை நிதி நிறுவனம் உடன் தடை செய்யப்பட வேண்டும் - டக்ளஸ் தேவானந்த...
மாற்றுத்திறனாளிகளுக்கான விஷேட திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும் - நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா வலி...
புவிச்சரிதவியல் பணியகத்தின் ஆளணி வெற்றிடங்கள் நிரப்பப்பட வேண்டும் - டக்ளஸ் எம்.பி. நாடாளுமன்றில் தெர...