தணிக்கை தகர்க்கவும், தர்மம் காக்கவும் வேண்டும் – நூலாசிரியருக்கு செயலாளர் நாயகம் வாழ்த்து!
Friday, March 17th, 2017
“தணிக்கை தகர்க்கும் தனிக்கை” நூல் வெளியீட்டு விழாவில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கலந்து கொண்டபோது, பிரதமர் ரணில் விக்ரம சிங்க அவர்களிடமிருந்த சிறப்புப் பிரதியைப் பெற்றுக்கொண்டார்.
இன்றைய தினம் (17.03.2017) கொழும்பு தபால் தலைமையக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற, தமிழ் மிரர் பத்திரிகையின் ஆசிரியர் ப. மதனவாசனின் ஆசிரியர் தலையங்கத் தொகுப்பு நூல் வெளியீட்டு நிகழ்வில் செயலாளர் நாயகம் கலந்து கொண்டிருந்தார்.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு சிறப்பித்த பிரதமர் ரணில் விக்ரம சிங்க அவர்கள்,சிறப்புப் பிரதியை செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவுக்கு வழங்கியபோது அதைப் பெற்றுக்கொண்ட செயலாளர் நாயகம் அவர்கள், நூலின் ஆசிரியர்ப. மதனவாசனுக்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.




Related posts:
கூட்டமைப்பினருக்குத் தகுந்த பாடம் புகட்டுவோம் - டக்ளஸ் தேவானந்தாவிடம் உடையார்கட்டு மக்கள் சுட்டிக்கா...
நல்லாட்சியில் பாதிக்கப்பட்ட மக்கள் தமது எதிர்காலத்தை தேடி ஈ.பி.டி.பியின் தலைமையகத்தில்!
கிளிநொச்சி முருகானந்தாக் கல்லூரியின் கல்விச் செயற்பாடுகளை முன்னேற்றுவதற்கு அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை...
|
|
|


