யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் சட்டவிரோத விடயங்களை எதிர்வரும் 10 நாள்களுக்குள் கட்டுப்படுத்த வேண்டும் – அமைச்சர் டக்ளஸ் அதிகாரிகளுக்கு உத்தரவு!

Friday, September 15th, 2023

யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் மணல் கடத்தல் கால்நடைகள் கடத்தல் மற்றும் ஏனைய சட்டவிரோத விடயங்களை, எதிர்வரும் 10 நாட்களுக்குள் கட்டுப்படுத்த வேண்டும் என கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

யாழ் குடா நாட்டில் அண்மைய நாள்களில் இடம்பெற்று வரும் சட்டவிரோத மணல் கடத்தல், கால்நடைகள் கடத்தல் ஏனைய சட்டவிரோத சம்பவங்கள் தொடர்பாக ஆராயும் விசேட கூட்டம், இன்று, யாழ் மாவட்ட செயலகத்தில், மாவட்டத்தின் ஒருங்கிணைப்பு குழுவின் தலைவரும் கடற்தொழில் அமைச்ருமான டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்றது.

குறித்த கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனை தெரிவித்திருந்தார்.

குறித்த கூட்டத்தில் யாழ்ப்பாணம் மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர், யாழ் மாவட்ட இராணுவ கட்டளை தளபதியின் பிரதிநிதி, பிரதேச செயலர்கள், பொலிஸ் உயர் அதிகாரிகள், பொது சுகாதார பரிசோதகர்கள் என பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

எமது மக்களின் உணர்வுப்பூர்வமான பிரச்சினைகளைத் தீர்த்து மக்களின் மனங்களை வெற்றி கொள்வதற்கு முன்வாருங்...
வட்டுக்கோட்டையில் இரு குழுக்களுக்கு இடையில் நடைபெற்ற மோதல் சம்பவத்திற்கும் ஈ.பி.டி.பி க்கும் எந்தத் ...
நுண்கடன் வழங்கிய நிறுவனங்கள் மீள் செலுத்தும் காலத்தை இயல்புநிலை வரும்வரை ஒத்திவைக்க வேண்டும் - அமை...