யாழில் மேலும் பல காப்பெற் வீதிகளுக்கு அடிக்கல் நாட்டினார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Saturday, October 3rd, 2020



யாழ்ப்பாணத்தின் முக்கிய பல வீதிகளை காப்பெற் வீதிகளாக மாற்றும் புனரமைப்பு வேலைகள் இன்று(03.10 2020) அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.

நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற மாற்று வீதிகளை காப்பெற் வீதிகளாக மாற்றும் வேலைத் திட்டத்தின் கீழ் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியினால் யாழ்ப்பாணத்தில் சுமார் 25 வீதிகள் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றன.

அந்தவகையில், 150 மில்லியன் செலவில் 40 கிலோமீற்றர் நீளமான வீதிகள் காப்பெற் வீதிகளாக மாற்றமடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: