சுண்டிக்குளம், களப்புத் தொடுவாய் பகுதிக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கண்காணிப்பு விஜயம் !
Sunday, January 16th, 2022
வடமாராட்சி கிழக்கு, சுண்டிக்குளம், களப்புத் தொடுவாய் பகுதிக்கு கண்காணிப்பு விஜயம் மேற்கொண்ட கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குறித்த பகுதியை சேர்ந்த கடற்றொழிலாளர்கள் எதிர்கொண்டு வருகின்ற நடைமுறைப் பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்ந்தார்.
குறிப்பாக, இப்பிரதேசத்தில் வீச்சு வலையைப் பயன்படுத்தி பாரம்பரியமாக இறால் பிடிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில், அண்மைக்காலமாக ஒரு பகுதியினரால் கூட்டு வலைப் பயன்படுத்தப்படுவதனால் ஏற்படும் நடைமுறைச் சிக்கல்கள் தொடர்பாக ஆராயப்படடது.
இதன்போது, மருதங்கேணி பிரதேசச் செயலாளர் பிரபாகரமூர்த்தி, கடற்றொழில் திணைக்களத்தின் யாழ் மாவட்ட பிரதானி ஜெ. சுதாகரன், நக்டா நிறுவனத்தின் வடக்கு மாகாணத்திற்கான பிரதானி நிருபராஜ் உட்பட துறைசார் அதிகாரிகளும் இணைந்து கொண்டனர்
00
Related posts:
மீனவர் படகுகளை பதிவு செய்வதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை!
சமூக அக்கறையும் தொலை தூரப் பார்வையும் ஊடகங்களுக்கு இருக்க வேண்டும். - அமைச்சர் டக்ளஸ் வேண்டுகோள்!
தோழர் காளியின் தந்தையாரது, பூதவுடலுக்கு ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அஞ்சலி மரியா...
|
|
|
மக்கள் குடியிருப்புக்களை அண்டிய பகுதிகளில் ஆயுதக் களஞ்சியங்கள் தவிர்க்கப்பட வேண்டும் – டக்ளஸ் தேவானந...
இரணைமடுக் குளத்தின் மேலதிக நீரை விவசாய நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தும் ஏதுநிலைகள் குறித்து அமைச்சர் ட...
பொருளாதார யுத்தத்தை வெற்றிகொள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வழங்கிவரும் ஆதரவு மகத்தானது – யாழ்ப்பாணத்த...


