மாதகல் பிரதேச மீன்பிடி இறங்கு துறைகளை புனரமைப்பது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆராய்வு!

Friday, June 26th, 2020

மாதகல் பிரதேசத்திற்கு விஜயம் மேற்கொண்ட கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மாதகல் பிரதேசத்தில் அமைந்துள்ள மீன்பிடி இறங்கு துறைகளை புனரமைப்பதற்காக ஒதுக்கப்பட்ட நிதியினை பயன்படுத்துவது தொடர்பாக கலந்துரையாடலென்றை மேற்கொண்டுள்ளார்.

குறித்த கலந்துரையாடல் இன்றையதினம் (26) நடைபெற்றது.

குறித்த கலந்துரையாடலில் அப்பகுதி கடற்றொழிலாளர் அமைப்புகள் கலந்துகொண்டு தத்தமது சங்கத் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் தேவைப்பாடுகள் தொடர்பில் அமைச்சரிடம் தெளிவு படுத்தியிருந்தனர்.

முன்பதாக காங்கேசன்துறை திருவள்ளுவர் சனசமூக நிலையத்தில் இடம்பெற்ற மக்கள் சந்தி்ப்பில் கலந்து கொண்ட ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பிரதேச மக்களின் எதிர்பார்ப்புக்கள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளமை குறிப்பிடத்தாக்கது.

Related posts: