ஜனாதிபதி வேட்பாளர் கோட்டபய ராஜபக்சவுக்கான ஆதரவுப் பிரசாரக் கூட்டம் யாழ்ப்பாணத்தில் டக்ளஸ் எம்.பி. தலைமையில் ஆரம்பம்!

Monday, October 14th, 2019

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளர் கோட்டபய ராஜபக்சவுக்கு ஆதரவு தெரிவிக்கு வகையில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஆதரவுப் பிரசார கூட்டம்  செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களது தலைமையில் ஆரம்பமாக நிடைபெற்றுவருகின்றது..

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஏற்பாட்டில் முதலாவது கூட்டம் யாழ்ப்பாணம் நீராவியடி பிள்ளையார் ஆலயத்திற்கு அருகாமையிலுள்ள இலங்கை வேந்தன் கலைக் கல்லூரி மண்டபத்தில் தற்போது நடைபெற்றுவருகின்றது.

இந்த பிரசார கூட்டதிதில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராயபக்ச அவர்களது மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராயபக்ச பங்குபற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே கட்சியின் இரண்டாவது ஆதரவு பிரசாரக் கூட்டம் பருத்தித்துறை சூரியமஹால் மண்டபத்தில் இன்று பிற்பகல் 6 மணிக்கு நடைபெறவுள்ளது.

Related posts:


மாங்குளம் வன்னி உணவகம் எதிர்கொள்ளும் பிரச்சினைக்கு தீர்வைப் பெற்றுத் தாருங்கள் – டக்ளஸ் எம்.பியிடம் ...
எத்தகைய தேர்தலையும் எதிர்கொள்ள தயாராகுங்கள் – கட்சியின் யாழ்.மாவட்ட நிர்வாகிகள் செயற்பாட்டாளர்கள் மத...
வெல்லமன்கட மீன்பிடித் துறைமுகத்தின் நிர்மாணப் பணிகளை நிறைவு - பிரதேச மக்கள் சார்பில் அமைச்சர் டக்ளஸ்...