மறைமாவட்ட ஆயருடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சந்திப்பு!

Saturday, November 10th, 2018

யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு கலாநிதி ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகையை ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தனது பிறந்த தினத்தை முன்னிட்டு அசீர்வாதத்தை பெற்றுக்கொண்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள ஆயர் இல்லத்தில் சந்திப்பு ஒன்று இன்றையதினம் (10) இடம்பெற்றது. இதன்போதே ஆசீர்வாதத்தை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பெற்றுக்கொண்டார். அத்துடன்  சமகால அரசியல் நிலைமைகள் தொடர்பிலும் இருவருக்கிடையே ஆராயப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

viber image

viber image000

Related posts: