மக்களை குழப்பும் நோக்கில் விஷமப் பிரசாரம்: கண்டிக்கிறது ஈ.பி.டி.பி.

Monday, August 3rd, 2020

மக்கள் மத்தியில் குழப்பத்தினை ஏற்படுத்தும் நோக்குடன் தவறான செய்திகள் பரப்பப்படுவதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முயற்சியினால் கடந்த காலங்களில் சுமார் 50,000 இற்கும் மேற்பட்டவர்கள் சமுர்த்தி பயனாளிகள் குடும்பத்தினர் இணைத்துக் கொள்ளப்பட்டனர்.

அவ்வாறு இணைத்தக் கொள்ளப்பட்டவர்களை நீண்ட கால நோக்கில் வலுப்படுத்துவதற்கான பயிற்சி பட்டறையினை ஈ.பி.டி.பி. ஏற்பாடு செய்திருந்தது.

சமுர்த்தி பயனாளிகள் மத்தியில் சுயதொழில் ஆர்வத்தையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தும் நோக்கில் குறித்த பயிற்சி பட்டறை மேற்கொள்ளப்படவிருந்தமை தொடர்பிலேயே தவறான செய்தி விசமிகளினால் பரப்பப்பட்டுள்ளது.

இதுதொடர்பில் கருத்து தெரிவித்துள்ள ஈ.பி.டி.பி. தரப்புக்கள், மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள தமக்கான ஆதரவு அலையை பொறுத்துக் கொள்ள முடியாத எதிர் அரசியல் தரப்புக்கள், மக்கள் மத்தியில் குழப்பத்தையும், தேர்தல் அதிகாரிகள் மத்தியில் சந்தேகத்தையும் ஏற்படுத்தும் நோக்கில் இவ்வாறான செய்திகள் பரப்பப்பட்டுள்ளதாக தெரிவித்தள்ளன.

அத்துடன், தற்போதைய அரசாங்கத்தின் சிரேஸ்ட அமைச்சரான டக்ளஸ் தேவானந்தா அவர்களின் தலைமையில் செயற்படும் ஈ.பி.டி.பி. கட்சி எந்தவொரு சூழலிலும் தேர்தல் விதிமுறைகளை மீறும் வகையில் செயற்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts:

வளங்கப்படும் சலுகைகளை மக்கள் அனுபவிக்க வழிவகை செய்வது அவசியமாகும் - டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!
எமக்கான தீர்வுகளை பெற்றுத்தரும் வல்லமை உங்களிடமே உள்ளது : டக்ளஸ் தேவானந்தாவிடம் நாவாந்துறை மக்கள் சு...
‘சேனா’ புழுவிற்கு விரைந்து முடிவுகட்ட வேண்டும் – நாடாளுமன்றில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சுட்...

ஒட்டுசுட்டானுக்கும், மருதங்கேணிக்கும் புதிதாக இரண்டு பிரதேச சபைகள் அமைக்கப்பட வேண்டும் - டக்ளஸ் தேவ...
முள்ளிவாய்க்காலில் புலிகளுக்கு நினைவு சதுக்கம் வேண்டாம் என்கிறது தினக்குரல் பத்திரிகை : இல்லை உயிரி...
அச்சமற்ற எதிர்காலத்தை பெற்றுத் தாருங்கள் - சீருடை விவகாரத்தில் சிக்குப்பட்டோர் அமைச்சர் டக்ளஸிடம் க...