போதையூட்டும் கருத்துக்கள் தொடர்பில் மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும்:- அமைச்சர் டக்ளஸ் வேண்டுகோள்!

Friday, April 28th, 2023

தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரின் போதையூட்டக்கூடிய கருத்துக்கள் தொடர்பாக மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்

வேலனை பிரதேச செயலகத்தில் இன்று(28.04.2023) இடம்பெற்ற விசாயிகளின் பெரும் போக அறுவடையின் போது அரசாங்கத்தினால் கொள்வனவு செய்யப்பட்ட நெல் மற்றும் நிகழ்ச்சித் திட்டம் மற்றும் ராணுவத்தின் மேலதிக பங்களிப்புடன் பெற்றுக்கொள்ளப்பட்ட நெல் ஆகியவற்றை அரிசியாக்கி வருமானம குறைந்த குடும்பங்களுக்கு பகிர்ந்தளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போது மேற்கண்டவாறு தெரிவித்தார்,

மேலும், வருமானம் குறைந்த மக்களுக்கு உதவும் முகமாக நாடு முழுவதும் 20 லட்சம் குடும்பங்களை தெரிவு செய்து ஒரு குடும்பத்திற்கும் தலா 10 கிலோ எடையுடைய அரிசி பொதி வீதம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

பாரபட்சமற்ற விதத்தில் ஜனாதிபதி இந்த முடிவினை எடுத்துள்ளார். இந்த முடிவினை எடுத்தது கிளிநொச்சி விவசாயிகளை ஜனாதிபதி களத்தில் சந்தித்தபோது நெல்லுக்கான உத்தரவாத விலையினை நூறு ரூபாவாக அறிவித்து இந்த திட்டத்தையும் அவர் அதில் அறிவித்திருந்தார்

அந்த வகையில் பாரபட்சமற்ற வகையில் நாடு தழுவிய ரீதியில் முன்னெடுத்து வருகின்றார் வட மாகாணத்தை பொறுத்தவரையில் இலங்கையினுடைய ஏனைய மாவட்டங்களைவிட சிறப்பாக இந்த திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. அந்த வகையில் சம்பந்தப்பட்ட அரசாங்க அதிபர்களுக்கு இந்த சந்தர்ப்பத்தில் நன்றி கூற கடமைப்பட்டு இருக்கின்றேன்

இந்த பிரதேச மக்கள் எதிர்கொள்கின்ற பல பிரச்சனைகள் பல காணப்படுகின்றன அதாவது ஒரு தேவையற்ற யுத்தத்தில் விசேடமான பிரச்சினைகள் எதிர்கொள்ளப்பட்டது இந்த பிரச்சினைகளில் இருந்து விடுபட்ட வேண்டியுள்ளதுடன், நாடு தழுவிய ரீதியில் பொருளாதார ரீதியான பாதிப்புகளுக்கு எங்கள் மக்கள் முகம் கொடுத்து வருகின்றார்கள்.

அந்த வகையில் இந்த நாடு கடந்த கால தேவையற்ற அழிவு யுத்தம் காரணமாகவும் கொரோனா தொற்று காரணமாகவும், வேறு சில காரணங்களினாலும் எங்களுடைய நாடு பொருளாதார ரீதியாக ஒரு அதாள பாதாளத்துக்கு சென்று விட்டது

இவ்வாறான சூழலில், இந்த நாட்டுக்கு தலைமை தாங்கக்கூடிய – பாதிப்பில் இருந்து மக்களை மீட்கக்கூடிய – முன்னோக்கி கொண்டு செல்லக்கூடிய வகையில் யாரும் இருக்கவில்லை. எல்லோரும் பின்னடித்த நேரத்தில் எங்களுடைய மாண்புமிகு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் முன் வந்தமைக்காக மக்கள் சார்பாக இந்த சந்தர்ப்பத்தில் அவருக்கு நான் பாராட்டை தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்

தற்போதுள்ள தலைவர்களுக்குள் மாண்புமிகு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிவ அவர்கள்தான் இந்த இக்கட்டான நிலைமையில் எங்களை முன் கொண்டு செல்லக்கூடிய ஒரு தலைவராக இருக்கின்றபடியினால் நாங்கள் அவரோடு நம்பிக்கையோடு நாங்கள் பயணிக்கலாம் என்பதையும் நான் இந்த சந்தர்ப்பத்தில் உங்களுக்கு தெளிவுபடுத்த வலியுறுத்த விரும்புகின்றேன்.

பாராளுமன்றத்தில் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் கட்டைக்காடில் இருநூறு ஏக்கர் சீனாவுக்கும் கிளிநொச்சியில் 800ஏக்கள் வெளிநாடுகளுக்கு கொடுப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்தார்

அதில் எந்தவிதமான உண்மை இல்லை நமது அரசாங்கத்தில் அவ்வாறு திட்டமும் இல்லை எந்தவிதமான அடிப்படையும் இல்லாமல் இவ்வாறான பொய்களை சில உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திலே வெளிப்படுத்துவதன் ஊடாக மக்கறை தவறாக வழிநடாத்த முயற்சிக்கின்றனர்.

வாக்குகளை அபகரிக்கரிப்பதற்காக தவறான கருத்துக்களை வைத்து வருகின்றார்கள் ஆனபடியினால் மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும். போதைவஸ்து பற்றி பேசுகின்றோம் இவர்களுடைய இந்த கருத்துக்களும் மக்களுக்கு ஒரு போதை ஊட்டக்கூடிய வகையில் தான் அமைந்திருக்கின்றன

ஆனபடியினால் விழிப்பாக இருக்க வேண்டும் என நான் தெரிவித்துக் கொள்கின்றேன். பொய்களை கூறி மக்களிடமிருந்து வாக்குகளை அபகரிப்பதற்காக அவர்கள் பொய்யான விடயங்களை பேசுகின்றார்கள் என்பதை மக்கள் மிகவும் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்” என்றார்,

Related posts: