“பிரேக் டவுன்” வண்டி போன்று இருந்த நாட்டை ஓடக்கூடிய நிலைக்கு மாற்றியவர் ஜனாதிபதி ரணில் – அமைச்சர் டக்ளஸ் சுட்டிக்காட்டு!
Tuesday, December 26th, 2023தற்போதுள்ள நிலைமையில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாகினால் மாத்திரமே நாட்டினை முன்னோக்கிகொண்டு செல்ல முடியும் என கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்
இன்று யாழ்ப்பாணத்தில் உள்ள “ஜாக்” தனியார் விருந்தினர் விடுதியில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு தெரிவித்தாதிருந்தார்.
தற்போது உள்ள நிலைமையில் அவர் ஜனாதிபதி வேட்பாளராக களம் இறங்கலாம் ஆனால் பிரேக் டவுன் வண்டி போன்று இருந்த நாட்டினை ஓரளவிற்கு ஓடக்கூடிய வண்டியாக தற்போதுள்ள ஜனாதிபதி ரனில் விக்ரமசிங்க மாற்றியுள்ளார்
எதிர்காலத்தில் இந்த நாட்டினை மீள் புதப்பித்த வண்டியாக மாற்றும் நிலைமை ஏற்படும். எனவே எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தற்போதுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாகினால் இந்த நாடு முன்னோக்கிச் செல்லும் எனவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|