பலாலி புனித செபஸ்ரியார் ஆலயத்தின் வருடாந்த பூசை வழிபாடுகளை மேற்கொள்ள அனுமதி பெற்றுத்தருமாறு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை!

Sunday, July 1st, 2018

பலாலி புனித செபஸ்ரியார் ஆலயத்தின் வருடாந்த பூசை வழிபாடுகளை இம்முறை குறித்த ஆலயத்திலேயே மேற்கொள்வதற்கு அனுமதி பெற்றுத்தருமாறு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் குறித்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்திருந்த குறித்த பகுதி மக்கள் பிரதிநிதிகள் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களை சந்தித்து கலந்துரையாடும் போதே குறித்த கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

கடந்த 35 வருடங்களாக இராணுவக் கட்டுப்பாட்டு பகுதிக்குள் இருக்கும் இவ்வாலயத்தின் அண்டிய பல பகுதிகள் தற்போது மக்களிடம் மீள கையளிக்கப்பட்டு மீள்குடியேற்றம் நடைபெற்றுள்ளது.

இந்த நிலையில் குறித்த ஆலயத்தின் வருடாந்த திருவிழா எதிர்வரும் 15 ஆம் திகதி நடைபெறவுள்ளது. எனவே இம்முறை குறித்த ஆலயத்தில் திருவிழாவை மேற்கொள்வதற்கு ஏற்பாடுகளை மேற்கொண்டு தருமாறு டக்ளஸ் தேவானந்தாவிடம் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

குறித்த கோரிக்கை தொடர்பில் கருத்து தெரிவித்த செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா துறைசார் அதிகாரிகளுடன் கலந்துரையாடி ஆலய பூசை வழிபாடுகளை மேற்கொள்வதற்கான முயற்சிகளை மேற்கொள்வதாக தெரிவித்திருந்தார்.

IMG_20180701_123510

IMG_20180701_131056

 

Related posts:

பறிக்கப்படும் நிரந்தர நியமனத்துக்கான உரிமையை பெற்றுத் தாருங்கள்: வடக்கு மாகாணசபையால் உள்வாங்கப்பட்ட ...
எமது பூர்வீக இருப்பிடங்களை பாதுகாத்து தாருங்கள் : டக்ளஸ் எம்.பி.யிடம் பாதிக்கப்பட்ட குருநகர் பகுதி ம...
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் திருமலையில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் விஷேட கலந்தரையாடல்!

தேசிய நல்லிணக்கத்தை வலியுறுத்துவதோடு எமது மக்களின் தாயகம், தன்னாட்சி, சுயநிர்ணய உரிமைக்காக நாம் தொடர...
இலங்கை பொலிஸ் சேவையில் பதவி உயர்வுகளில் பெண்களுக்கு அநீதி இளைக்கப்படுகின்றதா? - நாடாளுமன்றில் டக்ளஸ்...
குறுகிய சுயலாப அரசியல் நோக்கங்களுக்காக முன்னெடுக்கப்படும் கால இழுத்தடிப்புக்களை ஏற்றுக்கொள்ள முடியாத...