பலாலி, அன்ரனிபுரம் மக்களின் அவலங்களுக்கு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் நடவடிக்கை மூலம் தீர்வு!
Sunday, December 6th, 2020
சீரற்ற காலநிலை காரணமாக பலாலி, அன்ரனிபுரம் மக்கள் எதிர்கொண்ட அவலங்களுக்கு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் நடவடிக்கை மூலம் தீர்வு காணப்பட்டுள்ளது.
அண்மையில் ஏற்பட்ட புரெரி புயலினை அடுத்து ஏற்பட்ட தொடர்ச்சியான மழை அன்ரனி புரம் கிராமத்தில் வெள்ள நீர் நிரம்பியிருப்பது தொடர்பான செய்தி பிரதேச மக்களினால் ஈ.பி.டி.பி. கட்சியின் அமைப்பாளர்கள் ஊடாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.
இதனையடுத்து அமைச்சரின் வழிகாட்டலில் சம்மந்தப்பட்ட பிரதேச செயலாளருடன் தொடர்பு கொண்ட அமைச்சரின் ஒருங்கிணைப்பு செயலாளர் மற்றும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் குறித்த நீர் வழிந்தோட செய்வதற்கான ஏதுநிலைகள் தொடர்பாக ஆராய்ந்து உடனடியாக நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது
Related posts:
கோரிக்கைகள் நியாயமானதாகவும் மனித நேயம் மிக்கதாகவும் இருப்பதே எனது வெற்றியின் இரகசியம் - டக்ளஸ் எம்.ப...
வினைத்திறனான செயற்பாடுகளை முன்னெடுப்பது தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட பனை தென்னை வள கூட்டுறவுச் சங்கத்...
முல்லைத்தீவு கடற்றொழிலாளர்களுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் அரிசிப் பொதிகள் வழங்கிவைப்பு!
|
|
|


