வினைத்திறனான செயற்பாடுகளை முன்னெடுப்பது தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட பனை தென்னை வள கூட்டுறவுச் சங்கத்தின் நிர்வாகிகளுக்கு அமைச்சர் டக்ளஸ் ஆலோசனை!

Saturday, August 7th, 2021

கிளிநொச்சி மாவட்ட பனை தென்னை வள கூட்டுறவுச் சங்கத்தின் நிர்வாகிகளை சந்தித்து கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துரையாடியுள்ளார்.

குறித்த கூட்டுறவுச் சங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பாக ஆராய்ந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நிர்வாகச் செயற்பாடுகள் வெளிப்படைத் தன்மையுடன் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியதுடன் வினைத்திறனான செயற்பாடுகள் தொடர்பான ஆலோசனைகளையும் வழங்கியிரந்தமை குறிப்பிடத்தக்கது.

முன்பதாக முறிகண்டிப் பிள்ளையார் ஆலயத்திற்கான விஜயத்தினை மேற்கொண்ட கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஆலய வழிபாடுகளில் ஈடுபட்டதுடன், ஆலயத்திற்கான அன்னதான மண்டபத்தை அமைப்பது தொடர்பாகவும் ஆலய நிர்வாகத்தினருடன் கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்ககது.

Related posts:


13 ஆவது திருத்தச் சட்டத்திற்கு சேதாரம் இல்லை - அடித்து சொல்கிறார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!
இரசாயன கலப்பற்ற உணவுகளை மக்களுக்கு வழங்குவதே அரசின் நோக்கம் - கிளிநொச்சி மாவட்ட விவசாயிகளுக்கு தேவை...
தொடரும் சீரற்ற காலநிலை - கடற்றொழிலாளர்கள் பாதிக்கப்படாத வகையில் விழிப்புணர்வுகளை தொடர்ச்சியாக முன்னெ...