நீர்கொழும்பு களப்பு அபிவருத்தி திட்டத்தை நிறைவு செய்வதற்கு தடையாக உள்ள காரணிகளை அகற்றுவது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் ஆராய்வு!
Tuesday, August 24th, 2021
நீண்ட காலமாக நிறைவு செய்யப்படாமல் இருக்கின்ற நீர்கொழும்பு களப்பு அபிவருத்தி திட்டத்தினை நிறைவு செய்வதற்கு தடையாக இருக்கின்ற காரணிகளை களைவதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆராய்ந்துள்ளார்.
அதேபோன்று, களப்பு அபிவிருத்தி திட்டத்தின் ஊடாக நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற வேலைகளின் முன்னேற்றம் தொடர்பாகவும் கடற்றொழில் அமைச்சர் கேட்டறிந்து கொண்டார்.
மாளிகாவத்தையில் அமைந்துள்ள கடற்றொழில் அமைச்சில் இன்று நடைபெற்ற இக்கலந்துரையாடலில், அமைச்சின் செயலாளர் திருமதி. இந்து இரத்னாயக்கா மற்றும் சம்மந்தப்பட்ட நிறைவேற்று அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
000
Related posts:
நினைவேந்தல் நிகழ்வை பொது அமைப்பு நடத்துவதே பொருத்தமாக இருக்கும்- -செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!
வடக்கின் நீர்நிலைகளை ஆழமாக்கி நீர்வாழ் வளங்களை அதிகரிக்க நடவடிக்கை - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஆ...
முரண்பாடுகளுக்கு தீர்வுகாண விரைவில் கடற்றொழில்சார் தேசியக் கொள்கை - நாடாளுமன்றில் அமைச்சர் டக்ளஸ் ...
|
|
|


