தரித்து வைக்கப்பட்டுள்ள படகுகளால் மயிலிட்டி துறைமுகத்தில் அசௌகரியம் – தீர்வு வழங்கும் நடவடிக்கையில் அமைச்சர் டக்ளஸ் !

Saturday, March 30th, 2024

மயிலிட்டி துறைமுகத்தில் நீண்ட நாட்கள் தரித்து வைக்கப்படும் நீண்ட நாள் மீன்பிடிக் கலன்கள் மற்றும் இழுவைமடிப் படகுகளால், உள்ளூர் கடற்றொழிலாளர்கள் படகுகளை கரைசேர்ப்பது மற்றும் எரிபொருள் நிரப்புவது போன்ற செயற்பாடுகளுக்கு இடையூறுகளை எதிர்கொள்வதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முறையிடப்பட்ட நிலையில், குறித்த பகுதிக்கான கள விஜத்தினை இன்று(30.03.2024) மேற்கொண்ட அமைச்சர் நிலைமைகளை ஆராய்ந்தார்.

மேலும், மயிலிட்டி இறங்குதுறைக்கு வருகை தருகின்ற தென்னிலங்கையை சேர்ந்ந நீண்ட நாள் மீன்பிடிக் கலன்கள், துறைமுகத்தில் நாட்கணக்கில் தரித்து நிற்கின்றன.

அதேபோன்று, இலங்கை கடற்பரப்பினுள் சட்ட விரோதமாக நுழைந்த நிலையால் கைப்பற்றப்பட்ட பாரிய இந்திய இழுவைமடிப் படகுகளும் மயிலிடித் துறைமுகத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இதனால் மயிலிட்டிப் பிரதேசத்தை சேர்ந்த தொழிலாளர்கள் தங்களுடைய தொழில்சார் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கு போதிய இடவசதி இல்லாமல் இருக்கின்றது.

இந்நிலையில், நேரடியாக நிலமைகளை ஆராய்ந்த அமைச்சர், துறைமுகத்திற்கு எரிபொருள் நிரப்புதல் போன்ற தேவைகளை நிறைவேற்றுவதற்காக வருகை தருகின்ற மீன்பிடிக் கலன்கள் தேவையை நிறைவு செய்ததும், இறங்குதுறை தவிர்ந்த கடல் பகுதியில் தரித்து நிற்பதற்கும், இந்திய இழுவைமடிப் படகுகளை சற்று தள்ளி நங்கூரமிடுவதற்கும் ஏற்ற பொறிமுறையை நடைமுறைப்படுத்துமாறு சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

00

Related posts:


அர்த்தமற்ற உணர்ச்சி பேச்சுக்களுக்கு அடிமைப்பட்டு அனைத்தையும் இழந்துவிட்டோம் - டக்ளஸ் தேவானந்தாவிடம் ...
மக்கள் நிம்மதியுடன் வாழும் சூழல் தோற்றுவிக்கப்படும் வரை எமது அரசியல் பயணம் தொடர்ந்து பயணிக்கும் - மன...
பேலியகொடை மீன் சந்தை வளாகத்தில் சோலார் சிஸ்டம் - ஏற்பாடுகள் மேற்கொண்டு வருவதாக அமைச்சர் டக்ளஸ் தெரிவ...