சமுர்த்தி கொடி வாரத்தை ஆரம்பித்து வைத்தார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா! ல்

Wednesday, May 31st, 2023


யாழ். மாவட்டத்திற்கு சமுர்த்தி திட்டத்தினை அறிமுகப்படுத்திய –  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கைகளினால் கொடி வாரம் ஆரம்பித்து வைக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிப்பதாக சமுர்த்தி முகாமையாளர் கே.கருணாநிதி மகிழ்ச்சி வெளியிட்டுள்ளார்.

சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் கொடி வாரம் மே 31 ஆம் திகதியில் இருந்து ஜீன் 14 வரை கொண்டாடப்படவுள்ள நிலையில், இன்று யாழ்ப்பாணத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் கொடி வாரம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

சர்வதேச புகைத்தல் – மது எதிர்ப்பு தினத்தினை முன்னிட்டு சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினால் ஏற்பாடு செய்ப்பட்டுள்ள கொடி வாரத்தில்,  புகைத்தல் தொடர்பான விழிப்புணர்வை சமூக மட்டத்தில்  ஏற்படுத்தும் நோக்குடன் கொடி தினம் கொண்டாடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. – 31.05.2023

Related posts:

இரணைதீவுக்கு விஜயம் செய்து தீர்வுக்காக நிலைமைகளை நேரில் ஆராய்வேன் - டக்ளஸ் தேவானந்தாவிடம் ஆளுநர் தெர...
நம்பிக்கையோடு அணுகுகின்றவர்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவேன் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!
வேலைத்திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அதிகாரிகளுடன் கலந்துரைய...