இலங்கை கடற் பரப்பிற்குள் வரும் வெளிநாட்டு கப்பல்கள் தொடர்பாக நாரா நிறுவனத்தின் செயற்பாடுகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் விசேட கலந்துரையாடல்!

Tuesday, January 9th, 2024

வெளிநாட்டு கப்பல்கள் இலங்கை கடற் பரப்பிற்குள் வருவது மற்றும் வெளியேறிச் செல்வது தொடர்பான கண்காணிப்புகளை மேற்கொள்ளும் நாரா நிறுவனத்தின் செயற்பாடுகள் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கலந்துரையாடியுள்ளார்..

இன்று காலை அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலின்போது அமைச்சின் செயலாளர் மற்றும் நாரா நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதேவேளை

இலங்கை மீன்பிடித்துறைமுகங்கள் கூட்டுத்தாபனத்தின் தலைவர் உள்ளிட்ட அதிகாரிகளுடனும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துரையாடினார்.

குறித்த நிறுவனத்தின் மோதர துறைமுகத்தின் செயற்பாடுகள் தொடர்பில் நடைபெற்ற கலந்துரையாடலின்போது அமைச்சின் செயலாளர் நயனகுமாரி அவர்களும் கலந்து கொண்டிருந்தார்.

00

Related posts:

பல்கலைக்கழகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்ற ஆட்சேர்ப்புப் பட்டியலில் பெயர்கள் நீக்கப்பட்...
உள்ளூர் கடலுணவுகளை மீன்பிடிக் கூட்டுத்தாபனம் ஊடாக கொள்வனவு செய்ய 600 மில்லியன் ஒதுக்கீடு : அமைச்சரவை...
தீவகத்தில் கடல் வேளாண்மையை மட்டுமல்லாது நில வேளாண்மையையும் மேம்பாடு காணச்செய்வேன் – வேலணையில் அமைச்ச...