வவுனியாவில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வட்டார அலுவலகம் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் திறந்துவைப்பு!

Saturday, October 13th, 2018

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வட்டாரக் காரியாலயம் ஒன்று வவுனியாவில் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் சம்பிரதாயபூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

கட்சியின் மக்கள் பணிகளை முன்னெடுப்பதற்காக வவுனியா பூந்தோட்டம் பகுதியில் உள்ள நரசிம்மர் கோவிலடியில் குறித்த பணிமனை இன்று காலை செயலாளர் நாயகம் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

முன்பதாக இன்றையதினம் வவுனியா மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மாவட்டத்தின் பல பகுதிகளை உள்ளடக்கிய மக்களது பிரச்சினைகள் மற்றும் தேவைப்பாடுகள் தொடர்பில் முக்கியஸ்தர்கள் பலருடன் கலந்துரையாடவுள்ளார்.

இந்நிலையில் கட்சியின் வவுனியா நகரசபை உறுப்பினரான பாலசிங்கம் பிரசன்னா அவர்களது அரசியல் செயற்பாடுகளுக்கான அலுவலகம் இன்று சம்பிரதாயபூர்வமாக திறந்துவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது கட்சியின் தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம், ஊடகச் செயலர் தோழர் ஸ்டாலின் மற்றும் மாவட்ட அமைப்பாளர் திலீபன் உள்ளிட்ட பலர் கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

43788023_924394677767998_4770346577107615744_n 43828099_237278820301949_2144140582895747072_n 44039980_248984215734742_8976234035185451008_n

Related posts:

உரிய அதிகாரங்கள் பகிரப்படும் போதுதான் தேசியப் பிரச்சி னைக்கு தீர்வு காணமுடியும் -  வவுனியாவில் செயலா...
அராலித்துறை மக்களின் கோரிக்கைக்கு ஒரு வாரத்தில் தீர்வு பெற்றுக்கொடுத்தார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!
வடகடல் நிறுவனத்தின் செயற்பாடுகளை மேலும் வினைத்தினுடன் முன்கொண்டுசெல்வது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தல...

வரிச் சுமைகளிலிருந்து மக்கள் விடுவிக்கப்பட வேண்டும் - நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!
கம்பஹா, பௌத்தலோக மாவத்தையில் இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தின் விற்பனை நிலையம் கடற்றொழில் அமைச்சர...
கடும் வறட்சியான காலநிலை - நீர் ஆவியாவதை கட்டுப்படுத்தும் வகையில் சிறுதானிய செய்கை மேற்கொள்வது தொடர்ப...