காக்கைதீவு – சாவற்காடு கடற்றொழிலாளர் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முன்னிலையில் கைச்சாத்து!

Thursday, November 2nd, 2023

காக்கைதீவு  மற்றும் சாவற்காடு கடற்றொழிலாளர் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முன்னிலையில் இன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இரண்டு தரப்பினருக்கும் இடையில் அண்மைக்காலமாக நிலவிவந்த தொழில்சார் முரண்பாடுகளை தீர்த்து வைக்கும் வகையில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

காக்கைதீவில் அமைந்துள்ள கடற்றொழிலாளர் இறங்குதுறை மற்றும் மீன் விற்பனை சந்தை போன்றவற்றை பகிர்ந்து கொள்வதில் முரண்பாடுகள் ஏற்பட்ட நிலையில், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியினால் சுமூகமான தீர்விற்கு சம்மந்தப்பட்ட இரண்டு தரப்புக் கடற்றொழிலாளர்களும் சம்மதம் தெரிவித்த நிலையிலேயே இன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

குறித்த முரண்பாட்டினை தீர்க்கும் முயற்சியில், சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர், மானிப்பாய் பிதேச சபை செயலாளர் மற்றும் கடற்றொழில் திணைக்களத்ததின் யாழ் மாவட்டத்திற்கான பணிப்பாளர் உட்பட சம்மந்தப்பட்ட தரப்புக்களும் கலந்துகொண்ட நிலையில், சண்டிலிப்பாய் பிரதேச செயலக மண்டபத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முன்னிலையில் குறித்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:

முகமாலை பகுதியில் மிதிவெடிகளை அகற்றும் பணிகள் விரைவுபடுத்தப்பட வேண்டியது அவசியமாகும்! டக்ளஸ் தேவான...
தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் அரசு தீர்க்கமான முடிவுக்கு வரவேண்டும் - நாடாளுமன்றில் எடுத்துரைத்த ட...
புதிய கடற்றொழில் வரைபு ஒரு மாதத்தில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் - உலக உணவு மற்றும் விவசாய அ...