பல்கலையில் தமிழ் மொழி மாணவர்களுக்கு மொழிபெயர்ப்புவழங்கஏற்பாடுவேண்டும் – டக்ளஸ் தேவானந்தா!

Wednesday, December 7th, 2016

புகையிலைஉற்பத்திகள் கட்டுப்பாடுதொடர்பில் மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்களும், கௌரவசுகாதார அமைச்சர் அவர்களும் எடுத்துவரும் நடவடிக்கைகள் தொடர்பில் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்வதுடன், சீனி, உப்புமற்றும் கொழுப்பு போன்றவை தொடர்பிலும் பாராட்டத்தக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. எனினும், இவை தொடர்பில் மேலும் வலுமிக்கதானபிரச்சாரநடவடிக்கைகளைமேற்கொள்ளும் படியும்,பொதுவாகத் தேநீர்க் கடைகளில் தேநீர் வழங்கும்போது. சீனியைத் தேநீரில் கலந்துவழங்கும் ஏற்பாடுகளுக்குப் பதிலாக,சீனியைப் புறம்பாகவழங்கக் கூடியவாய்ப்புக்களைகட்டாயப்படுத்துமாறும், இவ்வாறானசெற்பாடுகளைச் செயலூக்கம் மிக்கதாகமேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றேன் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கைவிடுத்துள்ளார்.

கடந்த 05 ஆம் திகதி போசனை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சு தொடர்பிலான குழு நிலை விவாதத்தில் கலந்துகொண்டுஉரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தள்ளார்.

இதுதொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில் –

அதேநேரம்,வெளிநாடுகளில் மருத்துவத் துறைப் படிப்புகளைமேற்கொண்டு இலங்கைக்குத் திரும்புகின்றவர்களுக்கு, இலங்கைமருத்துவசங்கத்தின் மூலமாகநடாத்தப்படுகின்றபரீட்சையில் தோற்றுவதற்காக,அம்மாணவர்களை பல்கலைக்கழகங்களுக்கு உட்படுத்துகின்றநிலையில், ஏற்கனவேநமதுநாட்டில் நடைமுறையிலிருந்த அம் மாணவர்களின் விருப்பங்களை அறிந்து அவர்களுக்குப் பொருத்தமான பல்கலைக் கழகங்களுக்கு அவர்களை உட்படுத்துகின்ற நடைமுறை தற்போது பின்பற்றப்படுவதில்லை எனக் கூறப்படுகின்றது.

இந்தநிலையில், இறுதியாக இவ்வாறு ருஹ_னு பல்கலைக்கழகம் சென்ற 69 மாணவர்களில் 6 பேர் மாத்திரமேசித்தியடைந்ததாகக் கூறப்படுகின்றது. குறிப்பாக, ருஹ_னு பல்கலைக்கழகத்தில் கற்கச் செல்கின்றதமிழ் மொழி மூலமான மாணவர்களுக்கு மொழி பெயர்ப்புகள் இடம் பெறுவதில்லை என்றும், அதேநேரம் யாழ் பல்கலைக்கழகத்தில் கற்கும் சிங்களமொழி மூலமானமாணவர்களுக்கு மொழிபெயர்ப்புகள் இடம்பெற்றுவருவதாகவும் கூறப்படுகின்றது.எனவே,கௌரவஅமைச்சர் அவர்கள் இது தொடர்பில் ஆராய்ந்துஉரியநடவடிக்கைகளைமேற்கொள்ளவேண்டும் எனவும் கேட்டுக் கொள்கின்றேன்.

Untitled-3 copy

Related posts:

133 மில்லியன் வரிப்பணத்தை வட மாகாணசபைக்கு விடுவித்துக் கொடுங்கள்  - நாடாளுமன்றத்தில் டக்ளஸ் எம்.பி!
நம்பிக்கையில்லாப் பிரேரணை ஆட்சியாளர்களுக்கு மட்டுமல்ல : ஆட்சிபீடம் ஏற்றிய தமிழ்த் தரப்பினருக்கும் எத...
பலாலி விமான நிலையத்தின் நுழைவாயில் மாற்றத்திற்கு போது மக்களின் காணிகள் மேலும் சுவீகரிக்கப்படுமா? - ட...