கடமையை பொறுப்பேற்றுள்ள புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நேரில் வாழ்த்து.
Monday, October 29th, 2018
இலங்கையின் புதிய பிரதமராக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உத்தியோக பூர்வமாக பதவியேற்ற நிகழ்வில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா பங்கேற்று புதிய பிரதமருக்கு நேரில் சென்று தமது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 22ஆவது பிரதமராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இன்றையதினம் கொழும்பிலுள்ள ஜனாதிபதியின் செயலாளரது உத்தியோக பூர்வ அலுவலகத்தில் வைத்து தமது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுள்ளார்.
இன்று முற்பகல் சமய சம்பிரதாயங்கள் மத்தியில் குறித்த பொறுப்பேற்பு நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்வின் போது புதிய பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு தெரிவித்த ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதனிடையே ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பொன்று தற்போது பிரதமர் தலைமையில் நடைபெற்று கொண்டிருப்பதுடன் நாட்டு மக்களுக்கான தனது உரையை புதிய பிரதமர் ஆற்றவுள்ளார் என்றும் எமத கொழும்பிலுள்ள செய்தியாளர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:
|
|
|


