எமது மக்களுக்கு அனைத்து உரிமைகளும் கிடைக்கப்பெற வேண்டும் என்பதே எமது வலுவான நிலைப்பாடு – நெடுந்தீவில் டக்ளஸ் எம்.பி!

Friday, February 2nd, 2018

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வரலாற்றுத் தடத்தை இந்த நெடுந்தீவு மண்ணிலிருந்தே நாம் ஆரம்பித்து இற்றைவரையில் மக்களுக்கான பெரும் பணிகளை தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றோம் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலை முன்னிட்டு இரண்டு நாள் விஜயமாக நெடுந்தீவுக்கு சென்றுள்ள டக்ளஸ் தேவானந்தா தேவா அரங்கில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

தீவகப் பகுதியில் குறிப்பாக நெடுந்தீவுக்கும் எமக்கும் நெருங்கியதொரு உறவு உள்ளது. அது என்னவென்றால் 1991 ஆம் ஆண்டு நத்தார் தினத்தன்று இந்த மண்ணிலே  நாம் காலடியெடுத்துவைத்து எமது மக்களுக்கான பணிகளுடன் கட்சி ரீதியிலான செயற்பாடுகளையும் ஆரம்பித்திருந்தோம்.

அந்த வகையில் 3 தசாப்த காலத்திற்கு மேலான உறவும் நட்பும் இந்த மண்ணோடும் மக்களோடும் பின்னிப் பிணைந்திருக்கின்றது. இந்த மண்ணிலே நாம் பல்வேறுபட்ட மக்கள் நலன்சார்ந்த செயற்றிட்டங்களை முன்னெடுத்துச் சாதித்துக்காட்டியுள்ளோம்.

அவற்றில் குறிப்பாக 24 மணிநேர மின்சாரம், குடிநீர், போக்குவரத்து மற்றும் உட்கட்டுமாணம் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை நாம் வழங்கி இந்த மண்ணுக்கு பெருமை சேர்த்துள்ளோம்.

இந்த இடத்தில் ஒரு விடயத்தை திட்டவட்டமாகத் தெரிவிக்க விரும்புகின்றேன். ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி பெற்றுத் தந்ததைப்போன்று வேறெந்தக் கட்சிகளும் மக்களுக்கான சேவைகளை செய்ததும் கிடையாது செய்யப்போவதும் கிடையாது என்பதை உறுதிபடத் தெரிவிக்கின்றேன்.

நாம் மக்களுக்கு சேவையாற்றும்போது எவ்விதமான எதிர்பார்ப்புக்களையோ பிரதியுபகாரங்களையோ எதிர்பார்த்து செய்பவர்கள் அல்லர். மாறாக எமது மக்களுக்கு வளமான ஒளிமயமான வாழ்வை பெற்றுக்கொடுப்பதென்பதே எமது சிந்தனையாகவும் வெளிப்படைத் தன்மையான செயற்பாடுகளாகவும் உள்ளன.

எமது மக்களுக்கு கருத்து, பேச்சு, நடமாடும் சுதந்திர உரிமைகள் கிடைக்கப்பெற வேண்டும் என்பதே எமது வலுவான நிலைப்பாடாகும்.

நெடுந்தீவு மக்கள் எம்மீது காட்டும் அன்பும் பரிவும் கண்டு நான் மெய்சிலிர்த்துப் போனேன். பல அபிவிருத்திப் பணிகள் இன்னும் இங்கு மேற்கொள்ளப்படவுள்ள நிலையில் இருப்பதனால் அவற்றையும் எதிர்காலங்களில் தொடர்வதற்கான சந்தர்ப்பத்தையும் மக்கள் எனக்கு தருவார்கள் என்றும் நம்புகின்றேன் என அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts:

அர்த்தமற்ற உணர்ச்சி பேச்சுக்களுக்கு அடிமைப்பட்டு அனைத்தையும் இழந்துவிட்டோம் - டக்ளஸ் தேவானந்தாவிடம் ...
வேலணை பிரதேச முன்பள்ளிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வுகள் பெற்றுத்தரப்படும் – டக்ளஸ் எம்.பி...
தெல்லிப்பழை ஆதாரவைத்தியசாலையின் குறைபாடுகள் தீர்க்கப்பட வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. கோரி...

காங்கேசன்துறையில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் அலுவலகம் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் த...
இந்திய மீனவர்களின் அத்துமீறல்களுக்கு இவ்வருடத்திற்குள் முற்றுப்புள்ளி - கடற்றொழில் அமைச்சர் டக்...
சிவஸ்ரீ பாலசுப்பிரமணிய குருக்கள் பத்மநாதக் குருக்களின் இழப்புச் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது – அன...