முச்சக்கர வண்டி சேவையை வினைத்திறனான சேவையாக மாற்றுவது தொடர்பாக முச்சக்கர வண்டி உரிமையாளர்களுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துரையாடல்!

Tuesday, June 20th, 2023

யாழ் மாவட்ட முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்கத்தின் உறுப்பினர்களை சந்தித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முச்சக்கர வண்டி சேவை மேலும் வினைத்திறனான சேவையாக மாற்றுவது தொடர்பாகவும் முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாகவும் கலந்துரையாடினார்.

குறிப்பாக முச்சக்கர வண்டி கட்டண அறவீடுகள் தொடர்பாக தனக்கு கிடைத்து வருகின்ற முறைப்பாடுகள் தொடர்பாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் பிரஸ்தாபிக்கப்பட்ட நிலையில், ஆகஸ்ட் 1 ஆம் திகதிக்கு முன்னர் அனைத்து முச்சக்கர வண்டிகளுக்கும் மீற்றர்களை(கட்டண வாசிப்பு மாணி) பொருத்துவதற்கு முச்சக்கர வண்டி உரிமைாயளர்களினால் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.

அதேபோன்று, முச்சக்கர வண்டி தரிப்பிடம் மற்றும் தரிப்பிட பங்கீடு தொடர்பாக மாநகர சபை அதிகாரிகள் மற்றும் பொலிஸாருடன் கலந்துரையாடி சரியான வழிமுறைகளை பின்பற்றுவதற்கும் முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் சம்மதம் தெரிவித்தூள்ளனர்.

இக்கலந்துரையலில் மாநகர சபை ஆணையாளர் மற்றும் யாழ். மாநகர போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகளும் கலந்து கொண்டனர். – 20.06.2023

000

Related posts:

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விஷேட ஏற்பாடுகள் மூலம் சலுகைகள் வழங்கப்பட வேண்டும் - நாடாளுமன...
அதிகார துஸ்பிரயோகத்தை கண்டித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தவுக்கு யாழ் மாவட்ட அரச அதிகாரிகள் வாழ்த்து!
வடக்கில் செயலிழந்துள்ள பல்வேறு கைத்தொழில் முயற்சிகளை விரைவில் மீள ஆரம்பிக்க நடவடிக்கை – அமைச்சர் டக்...

ஈழத் தமிழர்களை விடுதலை செய்ய உடனடி நடவடிக்கை தேவை-டக்ளஸ்தேவானந்தா வெளிநாட்டலுவல்கள் அமைச்சருக்குத்...
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் கடல் பாசி செய்கையை ஊக்குவிக்கும் வகையில் தெரிவு செய்யப்பட்ட பயன...
பௌத்தத்தின் பெயரால் காணிகள் அபகரிக்கப்படுவதை தமிழ் மக்கள் விருப்பவில்லை -அமைச்சர் டக்ளஸ் எடுத்துரைப...