கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் நாடாளுமன்ற உறுப்பினர் வீரசுமன தலைமையிலான குழுவினர் கலந்துரையாடல்!

Monday, November 22nd, 2021

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை இன்று கடற்றொழில் அமைச்சில் சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினர் வீரசுமன தலைமையிலான குழுவினர், ஆழ்கடல் மீன்பிடிப் படகு தயாரிப்பாளர்கள் எதிர்கொள்ளுகின்ற பிரச்சினைகள் மற்றும் படகுகளை பதிவு செய்வதில் காணப்படும் அசௌகரியங்கள் தொடர்பாக கலந்துரையாடினார்கள்.

குறித்த விடயங்கள் தொடர்பாக ஆராய்ந்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,  அமைச்சின் செயலாளர் திருமதி இந்து இரத்னாயக்கா மற்றும் கடற்றொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹாவத்த ஆகியோருடன் தொடர்பு கொண்டு, நாடடிற்கு அந்நியச் செலாவணியை ஈட்டித் தரக்கூடிய மீன்பிடிப் படகுகளை தயாரிப்பதில் காணப்படும் அசௌகரியங்களை நீக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு ஆலோசனை வழங்கினார்.

Related posts:

யாழ்ப்பாணத்திலும்  நவீன வசதிகளுடன் கூடிய வானிலை அவதான நிலையம்  அமைப்பட வேண்டும் - நாடாளுமன்றில் டக்ள...
மக்கள் குடியிருப்புக்களை அண்டிய பகுதிகளில் ஆயுதக் களஞ்சியங்கள் தவிர்க்கப்பட வேண்டும் – டக்ளஸ் தேவானந...
வடக்கு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீன்பிடியாளர்கள் விவகாரம் தொடர்பில் அமைச்...

சாவகச்சேரி டிறிபேக் கல்லூரியின் பௌதீகவள பிரச்சினைகள் தொடர்பில் டக்ளஸ் எம்.பி நேரில் சென்று ஆராய்வு!
யாழ்ப்பாணம் - சென்னை இடையிலான விமான போக்குவரத்து கட்டணங்களை குறைப்பது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவா...
91 களில் எந்த கனவோடு இந்த மண்ணில் கால் பாதித்தேனோ அதே எண்ணங்களோடுதான் இன்றும் உங்களிடம் வந்துள்ளேன் ...