ஐயாத்துரை ஐயாவின் கனவுகள் நிறைவேறும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் மாவை கலட்டி மக்களுக்கு உறுதி!

Saturday, June 27th, 2020

நம்பிக்கையோடு காத்திருங்கள் ஐயாத்துரை ஐயாவின் கனவுகள் நிறைவேறும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் மாவை கலட்டி மக்களுக்கு உறுதியளிக்கப்பட்டது.

மாவை கலட்டி பிரதேசத்தில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பிரதேச சபை உறுப்பினராக இருந்த அமரர் ஐயாதுரை அவர்களை அமைச்சர் நினைவு கூர்ந்து கருத்துரைக்கையிலேயே இதனை தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில் –

இப்பகுதி மக்கள் எமது கட்சியை பலப்படுத்தும் சக்தியாக திகழ்பவர்கள். கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் எமது கட்சியின் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்தவர்கள் என்ற வகையில் இப்பகுதிக்கு எமது சேவைகள் முக்கியத்தவம் பெறுகின்றன.

அமரர் ஐயாதுரை அவர்கள் இப்பகுதிக்கும் மக்களுக்கும் செய்த சேவைகள் மட்டுமல்லாது அவர் மேலும் முன்னெடுக்க திட்டமிட்டிருந்த கனவுகள் அனைத்தையும் நாம் ஈடேற்றி காட்டுவோம் என்றார்.

Related posts:


யாழில் கல்லுடைக்கும் தொழிலாளர்களின் தொழில் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் - செயலாளர் நாயகம் டக்ளஸ...
இலட்சியக் கனவுகளை ஈடேற்றும் எமது மாணவச் செல்வங்கள் தைரியத்துடனும், நம்பிக்கையுடனும் பரீட்சையை எதிர்க...
அரசியல் பலம் அதிகரிக்கும்போ துதான் மக்களுக்கான சேவைகள் முழுமைபெறும் - டக்ளஸ் தேவானந்தா!