எமது நிலைப்பாட்டை ஏற்று எம்மோடு பயணிக்க விரும்புபவர்களை அரவணைத்துச் செல்லத் தயார் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Monday, December 27th, 2021

எமது மக்களின் அபிலாசைகள் தொடர்பாக எமது நிலைப்பாட்டினை தொடர்ச்சியாக நாம் வலியுறுத்தி வருகின்றோம். அதனை ஏற்று எம்மோடு பயணிக்க விரும்புகின்றவர்களை அரவணைத்துச் செல்லத் தயாராக இருக்கின்றோம் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட முக்கியஸ்தர்கள் மற்றும் பிரதேச அமைப்பாளர்களுடன் இன்று நடைபெற்ற கலந்துரையாடலின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

13 ஆம் திருத்தச் சட்டத்தினை முழுமையாக அமுல்படுத்தவதற்கு இந்தியா அழுத்தத்தினை கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைப்பதற்கு சக தமிழ் பேசும் கட்சிகள் சில ஒன்றிணைந்து பேச்சுக்களில் ஈடுபட்டு வருகின்றமை தொடர்பாக குறித்த கலந்துரையாலில் கருத்து தெரிவிக்கும்போதே, மேற்கண்டவாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்

000

Related posts:

கேப்பாபுலவு மக்களின் போராட்டத்திற்கு கிடைத்த மகத்தான வெற்றி - டக்ளஸ் தேவானந்தா எம்.பி. மகிழ்ச்சி தெர...
தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழ் மக்களுக்கான தீர்வுகளை பெற்றுக்கொள்ளும் வழிமுறைகள் நிறையவே உள்ளன - வவுன...
அமைச்சர் டக்ளஸ் முயற்சி - தெய்வீகத் தன்மை வாய்ந்த வேப்பமரப் பிரதேசம் மீண்டும் மக்கள் பாவனைக்கு முழும...

எமது இணக்க அரசியலூடான செயற்பாடுகள் இன்று வரலாற்று சாட்சிகளாக மிளிர்கின்றன - டக்ளஸ் தேவானந்தா!
நானாட்டான் பிரதேச சபை பாதீடு நிறைவேற்றலில் முறைகேடு - நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அமைச்சர் டக்ளசிடம் கோ...
அமைச்சர் டக்ளஸ் தலைமையில் நடைபெற்ற கிளிநொச்சி மாவட்டத்தின் ஜூலை மாதத்திற்கான ஒருங்கிணைப்பு குழு க...