எமக்கான உணவுத் தேவையை சுயமாக நிவர்த்தி செய்ய வீட்டுத் தோட்டங்கள் முன்னுரிமைப்படுத்தப்பட வேண்டும் – அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்து!

Friday, November 4th, 2022

உணவுப் பாதுகாப்பு என்பது சர்வதேச ரீதியில் பேசப்படுகின்ற நிலையில், எமக்கான உணவுத் தேவையை சுயமாகவே நிவர்த்தி செய்யும் வகையில் வீட்டுத் தோட்டங்கள் முன்னுரிமைப்படுத்தப்பட வேண்டும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார்.

கண்டாவளை பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட உணவுத் திருவிழாவில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.

கிளிநொச்சி, கண்டாவளை பிரதேச செயலகத்தின், ‘கிராமத்திலிருந்து உணவுப் பாதுகாப்பு’ எனும் தொனிப் பொருளிலான உணவுத் திருவிழா இன்று காலை நடைபெற்றது.

இதில் பிரதம விருந்தினராக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்து கொண்டிருந்த நிலையில் கட்டைக்காடு கலை ஔி கலாமன்ற மாணவிகளின் கலாசார நடனத்துடன் அமைச்சர் வரவெற்றக்பட்டிருந்த நிலையில் உணவுத் திருவிழா நிகழ்வு ஆரம்பமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

பியரின் விலைகுறைப்பு இளவயதினரின் மதுப்பழக்கத்தை அதிகரிக்கும் - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி சுட்டிக...
மியன்மார் நாட்டின் 72 ஆவது சுதந்திர தின நிகழ்வுகளில் கடல்தொழில் மற்றும் நீரியல் வள மூலங்கள் அமைச்சர்...
அனுமதிக்கப்படாத பிரதேசங்களில் மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் உள்ளூர் இழுவைப் படகுகள் கைப்பற்றப்பட்டு ச...

கிடைத்த சந்தர்ப்பத்தை தவறவிட்டதன் விளைவே குடிநீருக்கும் கோரிக்கை வைக்கும் நிலையை தோற்றுவித்துள்ளது ...
முதலமைச்சர் ஸ்ராலினுக்கு புரிந்தது யதார்த்தம் - ஆதாயம் தேடுகின்றனர் சுயநல அரசியல்வாதிகள் – அமைச்சர் ...
சுயலாப அரசியல்வாதிகள் தெரிவிக்கும் கருத்துக்களை மக்கள் எடைபோட்டு சரியான முடிவுகளை எடுக்க முன்வர வேண்...