சுயலாப அரசியல்வாதிகள் தெரிவிக்கும் கருத்துக்களை மக்கள் எடைபோட்டு சரியான முடிவுகளை எடுக்க முன்வர வேண்டும் – மல்லாவியில் அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்து!

Tuesday, October 10th, 2023

சில சுயலாப அரசியல்வாதிகள் தெரிவிக்கின்ற கருத்துக்களை மக்கள் எடைபோட்டு சரியான முடிவுகளை எடுக்க முன்வர வேண்டும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார்.

மல்லாவி மத்திய கல்லூரி தேசிய பாடசாலையில் நிலைப்பேறான பாடசாலைத் தோட்ட கண்காட்சி நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கொண்ட கருத்தை தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் -..

நிலைத்திருக்கும் அபிவிருத்தி ஒன்றே விவசாயம் என்றும் நாட்டில் விவசாய உற்பத்திகளை ஊக்குவித்து அதனை உற்பத்தி செய்யும் வழிமுறைகளை நாடளாவிய ரீதியில் கல்விக்கூடாக முன்னெடுத்துச் செல்லும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அவர்களின் பாரபட்சம் அற்ற செயற்பாடு பாராட்டதக்க விடயமாகும்

மேலும் நல்லிணக்கம், அபிவிருத்தி மற்றும் கலாசாரம் என்பனவே அரசாங்கத்தின் கொள்கை திட்டம் என்றும் தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வீழ்ச்சியடைந்துள்ள நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக புதிய எதிர்பார்ப்புடன் இருக்கக்கூடிய ஒரே தலைவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் சில சுயலாப அரசியல்வாதிகள் தெரிவிக்கின்ற கருத்துக்களை மக்கள் எடைபோட்டு சரியான முடிவுகளை எடுக்க முன்வர வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: