உருளைக் கிழங்கு பயிர்ச் செய்கையை மேற்கொள்வதற்கு 50 வீத மானியத்தினை பெற்றுத் தாருங்கள் – அமைச்சர் டக்ளஸிடம் கோரிக்கை!

Tuesday, December 26th, 2023


வடக்கில் அடுத்த பருவ காலத்தில் உருளைக் கிழங்கு பயிர்ச் செய்கையை சுமார் 150 ஹக்ரேயரில் மேற்கொள்வதற்கு 50 வீத மானியத்தினை பெற்றுத் தருமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

யாழ் மாவட்ட கமக்கார அமைப்புக்களின் பிரதிநிதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து குறித்த கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இந்த வருடம் நவீன மயப்படுத்தப்பட்ட மேம்பாட்டு திட்டத்தின் கீழ், வடக்கு விவசாயிகளுக்காக எடுத்துவரப்பட்ட சுமார் 21000 கிலோ உருளைக் கிழங்கு பயன்படுத்த முடியாத நிலையில் தொடர்பாகவும் இச்சந்திப்பில் பிரஸ்தாபிக்கப்பட்ட நிலையில், சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் குறித்த விடயம் தொடர்பாக அறிக்கை கோரியுள்ளதாக தெரிவித்த அமைச்சர், எதிர்காலத்தில் இவ்வாறான விடயங்கள் நடைபெறாது எனவும் தெரிவித்தார்.

இச்சந்திப்பில் விவசாயிகள் எதிர்கொள்ளும் பல்வேறு விடயங்கள் தொடர்பாகவும் இச்சந்திப்பில் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது. – 26.12.2023
000

Related posts:

குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு பெற்றுத்தாருங்கள் – ஊர்காவற்றுறை மக்கள் டக்ளஸ் எம்.பி.யிடம் கோ...
டக்ளஸ் தேவானந்தாவை நம்பி வாக்களியுங்கள்: தேர்தல் மேடையில் சூசகமாக தெரிவித்த இரா.சம்பந்தன்!
நிந்தவூர் பிரதேசத்திற்கு அச்சறுத்தலை ஏற்படுத்தும் கடலரிப்பை தடுப்பதற்கு உரிய நடவடிக்கை - அமைச்சர் டக...

நாட்டின் அனைத்து இன மக்களும் ஏற்றுக்கொள்ளும் அரசியல் தீர்வையே நாம் ஆதரிப்போம்  - நாடாளுமன்றில டக்ளஸ...
கிளிநொச்சி சட்ட விரோத மணல் அகழ்வை தடுக்க நடவடிக்கை - அமைச்சர் டக்ளஸ் தலைமையிலான ஒருங்கிணைப்பு குழுக்...
வடக்கின் அபிவிருத்திக்கென பல மில்லியன் நிதியை வழங்கும் இந்தியா, சீனா, ஜப்பான் நாடுகள் – சந்தரப்பங்கள...