உட்கட்டமைப்பு வசதிகள் அதிகரித்த போதிலும், மக்களுக்கு முழுமையான சேவை கிடைக்காதுள்ளது – அமைச்சர் டக்ளஸ் சுட்டிக்காட்டு!

Friday, March 29th, 2024


தொடர்ச்சியான பல்வேறு முயற்சிகள் மற்றும் அர்ப்பணிப்பான செயற்பாடுகள் மூலம் யாழ். போதனா வைத்தியசாலையின் உட்கட்டமைப்பு வசதிகள் அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும், தாதியர் பற்றாக்குறை காரணமாக முழுமைான சேவையினை மக்களுக்கு வழங்கமுடியாது இருப்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, யாழ் போதனா வைத்தியசாலையின் தற்போதைய  உட்கட்டமைப்பு வசதிகளின் அடிப்படையில் அண்ணளவாக 1800 தாதியர்களுக்கான தேவை இருக்கின்ற நிலையில் தற்போது சுமார் 650 தாதியர்கள் மாத்திரமே சேவையாற்றி வருகின்றனர்.

எனவே முடிந்தளவு தாதியர்களை இணைத்துக் கொள்வதற்கான அனுமதிகளை பெற்றுத் தருமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் வேண்டுகோள் முன்வைக்கப்பட்டது.

யாழ் போதனா வைத்தியசாலையின் செயற்பாடுகளை வினைத் திறனாக முன்னெடுக்கும் வகையில் செயற்பட்டு வருகின்ற ஆலோசனை குழுவின் கலந்துரையாடலின் போதே குறித்த விடயம் பிரஸ்தாபிக்கப்பட்டது.

Related posts:

நாம் மத்திய அரசுடன் இணைந்து அரசியல் அதிகாரத்தில் இருந்தது மக்களது நலன் சார்ந்த தேவைகளுக்காகவே – டக்ள...
வடமராட்சி பகுதி கடற்றொழிலாளர்களது பிரச்சினைகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் துவானந்தா களஆராய்வு!
கற்பிட்டிப் பிரதேசத்தில் இழுவைமடி தொழிலை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அமைச்...

கல்விக்கு விரைவில் மூடுவிழா நடத்தவா தனியார் பாடசாலைகளுக்கு அரச நிதி ஒதுக்கப்படுகின்றது - நாடாளுமன்றி...
நாட்டில் தெரு நாய்களைவிட குறைந்த நிலைக்கு புத்தாக்க முயற்சிகள் தள்ளப்பட்டுள்ளன – நாடாளுமன்றில் டக்ளஸ...
உலக மாற்றங்களை எதிர்கொள்வதற்கான புதிய பாடத்திட்டம் வெற்றியடைய ஆத்மார்த்தமாக உழைக்க வேண்டும். - அமைச்...