ஈழத்து சபரிமலை தேவஸ்தான சிறப்பு பூசை வழிபாடுகளில் கலந்து கொண்டார் டக்ளஸ் தேவானந்தா !
Wednesday, December 28th, 2016
ஈழத்து சபரிமலை தேவஸ்தானத்தில் சிறப்பு பூசை வழிபாடுகளில் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கலந்துகொண்டு சிறப்பித்துள்ளார்.
கோண்டாவிலில் அமைந்துள்ள குறித்த தேவஸ்தானத்திற்கு நேற்றையதினம் சென்றிரந்த டக்ளஸ் தேவானந்தா ஆலயத்தில் நடைபெற்ற சிறப்பு பூசை வழிபாடுகளில் கலந்துகொண்டதுடன் ஐயப்ப சுவாமிகள் பாடல்கள் அடங்கிய சிறப்பு நூல் ஒன்றையும் வெளியிட்டு வைத்தார்.
முன்பதாக ஈழத்து சபரிமலை தேவஸ்தானத்தில் இருந்து ஐயப்பசுவாமியின் திரு உருவச்சிலை யானையில் பிரதான வீதிகளூடாக பவனிவந்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.








Related posts:
முழுவீச்சில் முன்னெடுக்கப்படுகிறது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கருத் திட்டம்.!
அரசியல் நோக்கங்களுக்காக அதிகாரிகள் பழிவாங்கபப்படுவதை அனுமதிக்க முடியாது – வேலணையில் அமைச்சர் டக்ளஸ் ...
அமைச்சர் பஷிலின் பதவியேற்பு அரசாங்கத்தினை மேலும் வலுப்படுத்தி இருக்கின்றது - அமைச்சர் டக்ளஸ் வாழ்த்த...
|
|
|


