இலங்கை போதைப் பொருள் கடத்தல் நாடாக மாற்றியிருக்கின்றதா? – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி கேள்வி!

Thursday, January 10th, 2019

போதைப் பொருள் கடத்தல் மற்றும் விற்பனை நடவடிக்கை என்பது இலங்கையை ஒரு மீள் ஏற்றுமதி நாடாகவும் மாற்றியிருக்கின்றது. இதை ஏன் தடுக்கமுடியாதிருக்கின்றது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நடைபெற்ற 2002ஆம் ஆண்டின் 25ஆம் இலக்க குற்றவியல் கருமங்களில் பரஸ்பர உதவியளித்தல் சட்டத்தின் கீழான கட்டளை – ஆளொருவரின் இறப்புக்கான சேதவீடுகளை அறவிடுவதற்கான சட்டமூலம் தொடர்பாக உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஆவர் மேலும் தெரிவிக்கiயில் –

பிற நாடுகளில் இடம்பெறுகின்ற குற்றவியல் கருமங்கள் சம்பந்தமாக ,லங்கையின் ஒத்துழைப்பினை அந்த நாடுகளுக்கு வழங்குவதற்கும், இதே வியடம் தொடர்பில் அந்தந்த நாடுகளின் ஒத்துழைப்பினை இலங்கை பெற்றுக் கொள்வதற்குமாக எனும் நோக்கத்திற்கு அமைவாக இந்த குற்றவியல் கருமங்களில் பரஸ்பர உதவியளித்தல் சட்டம் கொண்டு வரப்படுவதாகத் தெரிய வருகின்றது.

கடந்த கிறிஸ்மஸ் – நத்தார் தினத்தை எடுத்துக் கொண்டால் – இயேசு கிறிஸ்துநாதர் பிறந்த தினமான அத் தினமானது ,ந்த நாட்டைப் பொறுத்தவரையில் தங்கல்லை, குடாவெரல்ல மீன்பிடித் துறைமுகத்தில் வைத்து நான்கு பேர் கொல்லப்பட்ட அதிகாலையுடன்தான் உதயமாகியிருந்தது.

அந்தவகையில், நாட்டின் தென்பகுதியிலே தொடர்ந்து இடம்பெற்று வருகின்ற மனிதப் படுகொலை தொடர்பில் ஊடகங்களைப் பார்க்கின்றபோதும், அவை தொடர்பிலான பொலிஸாரின் விசாரணைகளின் அறிக்கைகளைப் பார்க்கின்றபோதும், இந்த மனிதப் படுகொலைகளில் பல கொலைகளுக்குப் பின்னால் பாதாள உலக கோஸ்ரியினர் இருப்பதாகவே தெரிய வருகின்றது.

அதிலும், வெளிநாட்டில் ,ருந்து ,லங்கையில் இயக்குகின்ற சில நபர்களது சகாக்களிடையே ,ந்த கொலைகள் இடம்பெற்று வருவதாகவும் தெரிய வருகின்றது. வெளிநாடுகளில் இருக்கின்ற அந்த நபர்கள் யார?; எனப் பார்த்தால், அவர்கள் போதைப் பொருள் கடத்தல் மற்றும் விற்பனையுடன் தொடர்புபட்டவர்கள் என்று தெரிய வருகின்றது.

இன்று, இந்த நாடு போதைப் பொருள் கடத்தல் மற்றும் விற்பனை நடவடிக்கைகளின் கேந்திர நிலையமாக மாற்றப்பட்டுள்ளது. அதாவது, போதைப் பொருளானது இந்த நாட்டுக்குள் பரவலாக  – கிராமமயப் படுத்தல் முதற்கொண்டு பயன்படுத்தலுக்கான நுகர்வோரை அதிகளவில் கொண்டு, மேலும் பரவலாக்கப்பட்டு வருகின்றது. இதற்கென மிக அதிகளிவில் இளம் சிறு பிராயத்தினர் அடிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அதே நேரம், இந்த போதைப் பொருள் கடத்தல் மற்றும் விற்பனை நடவடிக்கை என்பது இலங்கையை ஒரு மீள் ஏற்றுமதி நாடாகவும் மாற்றியிருக்கின்றது. இதை ஏன் தடுக்கமுடியாதிருக்கின்றது.

Untitled-5

 

Related posts:

கிழக்குத் தமிழர் ஒன்றியத்தின் முயற்சிகள் வரவேற்கத்தக்கது - இரு தரப்பு சந்திப்பில் செயலாளர் நாயகம் டக...
‘அருகிலுள்ள பாடசாலை நல்ல பாடசாலை’ என்றால் அத்தகைய வளங்களைக் கொண்ட எத்தனை பாடசாலைகள் வடக்கில் இருக்கி...
தவறான தீர்மானங்கள் எமது மக்களுக்குப் பாதிப்புக்கள் ஏற்படுமாக இருந்தால் அதற்கு எதிராக தேவையான நடவடிக்...