இனப்பிரச்சினைக்கு தீர்வொ ன்றைக் காணவேண்டும் என்பதில் பிரதமர் அவர்களிடம் இருக்கும் தெளிவு மிக உயர்ந்ததாகும் –  டக்ளஸ் தேவானந்தா  தெரிவிப்பு

Friday, August 4th, 2017
தேசிய அரசியல் நீரோட்டத்தில் கலந்து கொண்டேன். அக்காலத்திலிருந்து இன்றுவரையிலான சுமார் 3 தசாப்தங்களாக ரணில் விக்கிரமசிங்க அவர்களுடன் நீண்டகால உறவுகளைப் பேணிக் கொண்டிருக்கின்றேன். அவர் ஆளுந்தரப்பினராக, எதிர்த்தரப்பினராக விளங்கிய காலங்களிலெல்லாம் நாம் மிகுந்த அந்நியோன்யமாக விடயங்களை முன்னெடுத்திருந்தோம். நாட்டின் இனப்பிரச்சினை தொடர்பில் அவரிடம் இருக்கும் தெளிவு மிக உயர்ந்ததாகும். அந்தக் காலகட்டத்தில் நோர்வே ஒப்பந்தத்தினூடாக பிரச்சினைகளைத் தீர்க்க முற்பட்டார். அதேபோல, ஜனாதிபதியாக வந்தால் பிரச்சினைகளைத் தீர்க்கலாம் என்ற நம்பிக்கையைக் கொண்டிருந்தார். துரதிருஷ;டவசமாக தூரநோக்கற்ற தமிழ் தலைமைகளின் போக்கால் அது கானல் நீராக மாறியது மாத்திரமல்லாமல், பாரிய அழிவையும் தமிழ் சமுதாயத்திற்கு கொடுத்திருந்தது என்று செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நாடாளுமன்றத்தில் உரையாற்றினார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் அரசியலில் நாற்பது ஆண்டுகளை  நிறைவு செய்துள்ளதன் நிமித்தம் இன்று(04.08.2017)நடைபெற்ற நாடாளுமன்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மேற்கண்டவாறு உரையாற்றியதுடன், தொடர்ந்து உரையாற்றுகையில்,
1977 ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி ஜே. ஆர். ஜெயவர்தனா அவர்களின் அரசு நாட்டின் சமூக, பொருளாதார விடயங்களில் பாரிய மாற்றங்களுக்கு இடமளித்திருந்தது. அது பொருளாதார வளர்ச்சிக்கு பெருமளவு பங்களிப்பைச் செய்துள்ளதுடன், அதனால் உச்சளவில் முன்னேற்றங்களும் ஏற்பட்டன. 1983 இல் துர்ப்பாக்கிய கறுப்பு ஜூலை நிகழ்வுகள் இடம்பெறாதிருந்திருக்குமாயின் நாட்டினை பெரும் அபிவிருத்தியை நோக்கி நகர்த்திச் சென்றிருக்க முடியும்.
துரித மகாவலி அபிவிருத்தித் திட்டம், தேசிய  இளைஞர் சேவைகள் மன்றம், மஹபொல மாணவர் நிதியம், உதாகம கிராம எழுச்சித் திட்டம், ஜனசவிய நிதியம் ஆகிய தேசிய திட்டங்கள் அன்றைய அரசினால் ஏற்படுத்தப்பட்டன.  இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வை நோக்கியதாக மாவட்ட அபிவிருத்திச் சபை முறைமையும், இலங்கை – இந்திய ஒப்பந்தத்தினூடாக மாகாண சபைகள் முறைமையும் ஏற்படுத்தப்பட்டன. இத்தனை செயற்றிட்டங்களுக்கு  ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தன மற்றும் ஜனாதிபதி பிரேமதாச ஆகியோருக்கு நிழல்போல் இருந்து கௌரவ ரணில் விக்கிரமசிங்க அவர்கள் செயற்பட்டு வந்தார். அவ்வப்போது அரசாங்கங்களால் எதிர்கொள்ளப்பட்ட அரசியல் நெருக்கடிகள் பலவற்றுக்கும் முகங்கொடுத்து அவற்றையெல்லாம் துணிச்சலுடன் எதிர்கொண்டு இன்றைய இந்த நிலைவரை உயர்துள்ளார் என்றே ரணில் விக்கரமசிங்க அவர்களை நோக்க முடிகின்றது. 1977 ஆம் ஆண்டில் இளம் நாடாளுமன்ற உறுப்பினராக அரசியலில் களம் புகுந்த கௌரவ ரணில் விக்கிரமசிங்க அவர்கள் பிரதி வெளிவிவகார அமைச்சராக பதவியேற்று திறம்பட செயற்பட்டதனால் ஜெயவர்த்தன அரசு பின்னர் அவருக்கு இளைஞர் சேவைகள், கல்வி விவகார அமைச்சுப் பொறுப்பைக் கொடுத்தது. அந்த காலகட்டத்தில் பலரது பாராட்டுதல்களையும் அவர் பெற்றிருந்தார். ஆசிரியர் சேவைக்கு ஆட்களைத் திரட்டுவதற்காக ஏற்கெனவே இருந்த முறையை மாற்றினார்.  போட்டிப் பரீட்சையின் மூலம் சிறந்த ஆசிரியர் சமுதாயத்தை உருவாக்கிய பெருமை அவரைச் சார்ந்ததாகும்.
இத்தகைய ஒருவருடான எனது உறவுகள் 1990 களின் ஆரம்பத்தில் ஏற்பட்டது. அக்காலகட்டத்தில் இந்தியாவில் காலத்தைக் கழித்த நான் இந்திய இராணுவம் நாட்டிலிருந்து வெளியேறிக்கொண்டிருந்த நேரத்தில் இலங்கை வந்து ஜனாதிபதி பிரேமதாச அவர்களுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு அன்றிலிருந்து தேசிய அரசியல் நீரோட்டத்தில் கலந்து கொண்டேன். அக்காலத்திலிருந்து இன்றுவரையிலான சுமார் 3 தசாப்தங்களாக ரணில் விக்கிரமசிங்க அவர்களுடன் நீண்டகால உறவுகளைப் பேணிக் கொண்டிருக்கின்றேன். அவர் ஆளுந்தரப்பினராக, எதிர்த்தரப்பினராக விளங்கிய காலங்களிலெல்லாம் நாம் மிகுந்த அந்நியோன்யமாக விடயங்களை முன்னெடுத்திருந்தோம். நாட்டின் இனப்பிரச்சினை தொடர்பில் அவரிடம் இருக்கும் தெளிவு மிக உயர்ந்ததாகும். அந்தக் காலகட்டத்தில் நோர்வே ஒப்பந்தத்தினூடாக பிரச்சினைகளைத் தீர்க்க முற்பட்டார். அதேபோல, ஜனாதிபதியாக வந்தால் பிரச்சினைகளைத் தீர்க்கலாம் என்ற நம்பிக்கையைக் கொண்டிருந்தார். துரதிருஷ்டவசமாக தூரநோக்கற்ற தமிழ் தலைமைகளின் போக்கால் அது கானல் நீராக மாறியது மாத்திரமல்லாமல், பாரிய அழிவையும் தமிழ் சமுதாயத்திற்கு கொடுத்திருந்தது.
இந்நிலையில் அவர் கொண்டிருக்கக்கூடிய தீர்வுக்கான யோசனைகள் மிகப் பயனுள்ளவை என நாம் அறிவோம்.  அவை 13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதில் முன்னோக்கிச் செல்லும் திட்டத்தைவிடச் சிறப்பானதாக அமையுமாக இருந்தால், அவரது அந்த யோசனைகளுக்கூடாக இலங்கையின் இனப்பிரச்சினைக்கான தீர்வு விரைவாக உருவாகவுள்ள அரசியல் யாப்பு வழியாக நிச்சயம் எட்டப்படுமாயின், அவரது யோசனைகளை நாம் நிச்சயம் வரவேற்போம் எனக்கூறிக்கொண்டு, 40 ஆண்டுகால அரசியல் வரலாற்றுப் பூர்த்தியினைக் கொண்டாடும் கௌரவ ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கு எனதும் எனது நுPனுP கட்சியினதும் நான் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களினதும் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன் என்றும் தெரிவித்தார்.

Related posts:


வன்னேரிக்குளம் கிராமத்தில் சுற்றுலா மையமொன்றை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்! - செயலாளர் நாயகம் ட...
வவுனியாவில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை பொது அமைப்புக்கள், பொதுமக்கள் சந்தித்து தமது தேவைப்பாட...
வடக்கின் சுகாதாரத்துறை முன்னேற்றம் குன்றியநிலையில் காணப்படுகின்றது – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி.சுட...