அமைச்சர் டக்ளஸ் தலைமையில் நடைபெற்ற யாழ்ப்பாணம் பிரதேச அபிவிருத்தி ஒருங்கினைப்பு குழு கூட்டம் !

Wednesday, January 31st, 2024


……….
யாழ்ப்பாணம்  பிரதேச அபிவிருத்தி ஒருங்கினைப்பு குழு கூட்டம்  கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா  தலைமையில் இன்றைய தினம்  பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

யாழ்ப்பாண பிரதேச செயலாளரின் ஒழுங்கு படுத்தலில் ஆரம்பமான பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில், பிரதேசத்தில் நடப்பு ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட வரவுசெலவுத் திட்டத்தின் ஊடக பிரதேசத்திற்கு ஒதுக்கப்படும் நிதி அதனூடாக மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ள அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக ஆராயப்பட்டதுடன் கடல்றொழில் அபிவிருத்தி மற்றும் முக்கிய விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன.

மேலும் துறை ரீதியான முன்னேற்ற மீளாய்வில் சேவைத்துறை சார்ந்த முன்னேற்றங்கள், அவற்றின் தீர்வுகள் குறித்தும் ஆராயப்பட்டுள்ளன.

இதில் , வடக்கு மாகாண அவைத் தலைவர் கே.வி.சிவஞ்ஞானம்  மற்றும் பிரதேச  செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள், என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டனர்.

Related posts: