போராளிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்த கடுமையாக உழைப்பேன்; அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாதெரிவிப்பு

Saturday, November 17th, 2018

புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகத்துடன் இணைக்கப்பட்ட விடுதலைப்புலி உறுப்பினர்கள் பலர் தமது வாழ்வாதாரத்தை முன்னெடுப்பதற்கு மிகவும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றீர்கள் என்பதை நான் அறிவேன். உங்களில் பலர் என்னுடன் தொடர்புகொண்டு நீங்கள் எதிர்கொண்டுள்ள நிலைமைகளை பகிர்ந்துகொண்டுள்ளீர்கள் என்பதையும் நான் கவனத்தில் கொண்டுள்ளேன். எனவே சமூகத்துடன் இணைக்கப்பட்டு, பொதுவாழ்வில் இருக்கும் உங்களுக்கு சுய தொழில் செய்யவும், வருமானம் ஈட்டக்கூடிய முயற்சிகளை மேற்கொள்ளவும் எனது அமைச்சின் கீழ் வருகின்ற புனர்வாழ்வு அதிகாரசபையின் ஊடாக இலகுகடன் வசதிகளை வழங்கவும், அத்துடன் மேலதிக உதவித் தொகைகளைப் பெற்றுத்தரவும் நடவடிக்கை எடுத்துவருகின்றேன். எனவே இதுவரை அவ்வாறான உதவிகள் கிடைக்காதவர்கள் உங்கள் கோரிக்கையை நீங்கள் வாழும் பிரதேசசெயலாளர்கள் ஊடாக எனக்கு முகவரி இட்டு அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

எனவே புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த உறுப்பினர்கள் காலம் தாழ்த்தாது உங்கள் கோரிக்கைகளை உங்கள் பிரதேசசெயலாளர் ஊடாக எனக்கு கிடைக்கச் செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

Related posts:

கீரிமலை வலித்தூண்டல்றோ.க.த.க.பாடசாலையின் செயற்பட்டு மகிழ்வோம் நிகழ்வில் பிரதம விருந்தினராக அமைச்சர் ...
மன்னாருக்கு வேலைவாய்ப்புக்களும் உட்கட்டமைப்பு வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது - காற்றாலை அங்குரார்...
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆலோசனை - கடற்றொழில் - நீர்வேளாண்மையை முன்னகர்த்த மற்றுமொரு முன்னெடுப்பு!

பளை - காங்கேசன்துறை இடையிலான நகரப் போக்குவரத்துச் சேவை மீள ஆரம்பிக்கப்பட வேண்டும் - டக்ளஸ் எம்.பி. வ...
பேரம் பேசும் அதிகாரம் எமக்கு கிடைக்குமானால் பிரச்சினைகளுக்கு தீர்வும் எட்டப்படும் - செயலாளர் நாயகம் ...
யாழ்ப்பாணத்திலும் கொரோனா மருத்துவ பரிசோதனை நடைபெற வேண்டும்: அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கோரிக்கைக்...