அமைச்சர் டக்ளஸ் அதிரடி நடவடிக்கை – பூநகரி ஜெயபுரம் மக்களின் நீண்டகால பிரச்சினைகளுக்கு கிடைக்கப்பெற்றது தீர்வு!

Friday, December 22nd, 2023

பூநகரி ஜெயபுரம் மக்கள் தாம் நீண்டகாலமாக எதிர்நோக்கிவந்த அடிப்படை பிரச்சினைகளுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கொண்ட அதிரடி நடவடிக்கைகளின் பயனாக தீர்வு வழங்கப்பட்டுள்ளது.

பூநகரி ஜெயபுரம் பகுதிக்கு நேற்று மாலை (21.12.2023) கள விஜயம் மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை வரவேற்ற மக்கள் தாம் எதிர்நோக்கும் பிரச்சினைகளை கோரிக்கைகளாக முன்வைத்தனர்.

மக்களின் கோரிக்கைகளை ஒவ்வொன்றாக ஆராய்ந்த அமைச்சர், விடயங்களுடன் சம்பந்தப்பட்ட துறைசார்ந்த அமைச்சு உயரதிகாரிகள், திணைக்களத் தலைவர்கள் மாற்றும் நிறுவன அதிகாரிகளுடன் தொடர்புகொண்டு உடனடியாக  நடவடிக்கை எடுப்பதற்கான பணிப்புரைகளை மேற்கொண்டார்.

மரமுந்திரிகை பண்ணை பகிர்ந்தளித்தல், விவசாயப் பயிர்ச்செய்கைக்கான காணி ஒதுக்கீடு, வைத்தியசாலைக்கு நிரந்தரமாக பணிக்கு அமர்த்தல்,  ஜெயபுரம் – கிளிநொச்சி பாதை புணரமைப்பு, வயற்காணிக்குரிய அனுமதி, வீடமைப்புத்திட்டம், கடந்தகால யுத்தத்தால் பாதிக்கப்பட்டோருக்கு நஷ்டஈடு, புதிதாக திருமணமானோருக்கு காணி,  தற்போது பெய்யும் தொடர்மழை காரணமாக பாதிக்கப்பட்டோருக்கு  நஷ்டஈடு மற்றும் பாடசாலை ஒழுங்கைக்கு மின் இணைப்பு போன்ற கோரிக்கைகளை ஜெயபுரம் மக்கள் முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: