அனுபவங்களூடாக ஆற்றல்களை மேம்படுத்தி சமூக முன்னேற்ற த்திற்கான பங்களிப்புகளை வளர்த்துக்கொள்ளவேண்டும் – டக்ளஸ் தேவானந்தா
Sunday, June 11th, 2017
பெண்கள் அனுபவங்களூடாக ஆற்றல்களை வளர்த்துக்கொண்டு சமூக முன்னேற்றத்திற்கான பங்களிப்புகளை வளர்த்துக்கொள்ளவேண்டும் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் அமைந்தள்ள கட்சியின் தலைமை அலுவவலகத’தில் இன்றையதினம் நடைபெற்ற கட்சியின் மகளிர் அமைப்பினருடனான சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் –
பெண்கள் அரசியலில் மட்டுமன்றி சமூக முன்னேற்றத்தின் அபிவிருத்தி செயற்பாடுகளிலும் பங்கெடுக்கவேண்டும் என்பதே எமது கட்சியின் நிலைப்பாடாகும்.
கடந்த காலங்களில் நாம் அரசியல் செயற்பாடுகளில் பெண்களுக்கான வாய்ப்புகளையும் சந்தர்ப்பங்களையும் வழங்கியிருந்தோம். இதனை எதிர்காலத்தில் மேலும் வலுப்படுத்தும் பொருட்டு அதற்கான திட்டங்களை வகுத்து செயற்படுத்த வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
Related posts:
|
|