வெளிநாட்டில் இருந்து க.பொ.த பரீட்சைகளை எழுதுவதற்கு அனுமதி?
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2019/06/z_p04-UNP.jpg)
வெளிநாடுகளில் வசிக்கின்ற இலங்கையர்களது பிள்ளைகள், கல்விப் பொதுத் தராதர சாதாரண தர மற்றும் உயர்தர பரீட்சைகளை அவர்கள் வசிக்கும் நாடுகளில் இருந்து எழுதுவதற்கான வசதிகள் ஏற்படுத்தப்படவுள்ளன.
இதற்கான பொறிமுறையை உருவாக்குமாறு கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம், பரீட்சைகள் திணைக்களத்துக்கு அறிவுறுத்தியுள்ளார்.
இதன்படி அவர்கள் வசிக்கின்ற நாடுகளில் உள்ள இலங்கையின் ராஜதந்திர அலுவலகத்தில் இந்த பரீட்சைகளுக்கு தோற்றுவதற்கான ஏற்பாட்டை மேற்கொள்ள தாம் அறிவுறுத்தி இருப்பதாக கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
பெல்ஜியம் சென்றார் பிரதமர்!
மலேரியா நோயை பரப்பும் நுளம்புகள் வட மாகாணத்தில்!
கைத்தொழில் துறையை பலப்படுத்தி ஊக்குவிக்க நிபுணத்துவ ஆலோசனை குழு – ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச அறிவிப்பு...
|
|