வடக்கு மாகாணத்தின் கல்வி நிலையை கட்டியெழுப்புவதற்கு சிறந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் – யாழ்ப்பாணத்தில் கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் உறுதி!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2021/02/download-11-1.jpg)
வட மாகாணத்தின் கல்வியை கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கை சிறந்த முறையில் முன்னெடுக்கப்படும் என கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்திற்கான விஜயம் மேற்கொண்டிருந்த நிலையில் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில் –
வடக்கு மக்களுக்கு கல்வி முக்கிய விடயமாகும். அத்துடன் வடக்கு மாகாணத்தில் பாடசாலைகளில் காணப்படும் பிரச்சினைகள், ஆசிரியர் பற்றாக்குறை, போக்குவரத்து பிரச்சினை, தேசிய பாடசாலைகளை இனங்காணல் உள்ளிட்டவற்றை கலந்துரையாடி சிறந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும் என்றுமு; அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இது குறித்த முன்னேற்ற அறிக்கை இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை பெற்றுக்கொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ள கல்வி அமைச்சர் பீரிஷ் இந்த குறைப்பாடுகளை நிவர்தி செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|