மூன்று தனியார் மின் உற்பத்தி நிலையங்களை கொள்வனவு செய்ய இலங்கை மின்சார சபை தீர்மானம்!
Saturday, April 3rd, 2021தனியாருக்கு சொந்தமான 3 மின் உற்பத்தி நிலையங்களை கொள்வனவு செய்ய இலங்கை மின்சார சபை தீர்மானித்துள்ளதாக இலங்கை மின்சார சபையின் தலைவர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
அத்துடன் தற்போதுள்ள மின் உற்பத்தி நிலையங்களினூடாக சபையின் அவசர மின்சாரத் தேவை பூர்த்தி செய்யப்படுவதாகவும் இலங்கை மின்சார சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.
நீர் மின்னுற்பத்தியில் பற்றாக்குறை ஏற்படும் காலப்பகுதியில் இந்த மின் நிலையங்களினூடாக நாளாந்தம் 170 மெகா வாட் மின்சாரத்தை பெற்றுக்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதற்கமைய, குறித்த 3 தனியார் மின் உற்பத்தி நிலையங்களை கொள்வனவு செய்வது தொடர்பில் அமைச்சரவையின் அனுமதி கோரப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் தலைவர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
கம்பஹா பியகமவில் உள்ள MAS ஆடைத் தொழிற்சாலை ஊழியருக்கு கொரோனா!
பொதுமக்கள் பூரண ஒத்துழைப்பு - தடுப்பூசி நடவடிக்கை யாழ் மாவட்டத்தில் நான்காவது நாளாகவும் வெற்றிகரமாக ...
சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் வருடாந்த கூட்டங்களில் நிதி இராஜாங்க அமைச்சர் பங்கேற்பு!!
|
|