முல்லைத்தீவு மன்னாகண்டல் பகுதியில் யானை தாக்கி ஒருவர் பலி!

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மன்னாகண்டல் கிராமத்தில் காட்டு யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்றிரவு 09.00 மணியளவில் வீட்டிலிருந்து மீன் பிடிப்பதற்காகச் சென்ற குறித்த நபர் திரும்பி வராத நிலையில் இவரைத் தேடி அதிகாலை 02.00 மணிக்கு உறவினர்கள் சென்றவேளை காட்டுபகுதியில் இறந்து கிடந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் கெருடமடு. மன்னாகண்டலைச் சேர்ந்த 65 வயதுடைய அழகன் கோபால்ராஜ் என்பவர் என கூறப்படுகிறது. இந்நிலையில் புதுக்குடியிருப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
வானிலிருந்து வீழ்ந்த மர்மத் திரவத்தின் பாதிப்பால் வேம்படி மகளிர் கல்லூரி மாணவிகள் 18 பேர் வைத்தியசால...
சைனோபாம் தடுப்பூசி - இரு செலுத்துகையையும் பெற்றவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியைக் கடந்தது - இராஜாங்க அம...
எரிபொருளுக்காக 500 மில்லியன் கடன் - அமைச்சரவை அனுமதி!
|
|