உங்கள் பிள்ளை எத்தனை பேரை வெட்டியவர் தெரியுமா ? – பெற்றோரை கண்டித்த பொலிஸார்!

Thursday, February 9th, 2017

வாள்வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் தனஞ்செயன் என்ற இளைஞன் தேடப்பட்டு வரும் உங்கள் பிள்ளை வாளால் எத்தனை பேரை வெட்டிச் சாகடித்திருப்பான் அப்போது உங்களுக்கு வலி தெரிவயவில்லையா? என தனஞ்செயன் பெற்றோரை பொலிஸார் கண்டித்துள்ளனர்.

வாள்வெட்டுக் குழுக்களுடன் சம்பந்தப்பட்டவர் என்று குற்றஞ்சாட்டப்பட்டுத் தேடப்பட்டு வரும் தனஞ்செயனின் வீட்டின் மீது இனந்தெரியாதவர்கள் தாக்குதல் மேற்கொண்டதாகக் கூறி தனஞ்செயனின் பெற்றோர் யாழ்ப்பாண பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளனர். இனந் தெரியாத நபர்களினால் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தமக்கு பாதுகாப்பு இல்லை என்றும் பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர். முறைப்பாட்டைப் பெற்றுக்கொண்ட பொலிஸார் உங்கள் பிள்ளை வாளால் எத்தனை பேரை வெட்டிச் சாகடித்திருப்பான் அவ்வாறு கொல்லப்பட்டவர்களின் வலி, அங்கவீனர்களாகியவர்களின் வலி அப்போது உங்களுக்கு தெரிவயவில்லையா? என்று பொலிஸார் அவர்களிடம் கேட்டுள்ளனர்.

பிள்ளையை சரணடையச் செய்யுமாறும் பொலிஸார் அவர்களிடம் கூறி எச்சரித்து அனுப்பியதாகவும் பொலிஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.

post-1432

Related posts: