பொலிஸ் உத்தியோகத்தர்களது சீருடையில் கமரா பொருத்த புதிய யோசனை!

பொலிஸ் உத்தியோகத்தர்கள் அனைவரினதும் சீருடையில் குரல்களையும் காட்சிகளையும் பதிவு செய்யக் கூடிய வகையில் கமரா பொருத்துவது குறித்து யோசனை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.
நேற்றும், நேற்று முன்தினமும் ஹம்பாந்தோட்டை ஷங்கரீலா ஹோட்டலில் நடைபெற்ற ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான செயலமர்வில் குறித்த யோசனை முன்வைக்கப் பட்டுள்ளது.
பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஊழல் மோசடிகளில் ஈடுபடுவதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களை வரையறுக்கும் நோக்கில், சீருடையில் கமராக்களை பொருத்துவதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. இதேவேளை, இந்த செயலமர்வில் வரவு செலவுத் திட்ட யோசனையை அமுல்படுத்த சில குழுக்கள் நியமிப்பது குறித்து பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. எனினும், இறுதித் தீர்மானங்கள் எதுவும் எடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
Related posts:
ஒரே சமயத்தில் அனைத்து உள்ளூராட்சி மன்றங்களுக்கும் தேர்தல்!
பனைவளத்தை மூலதனமாக்கி வாழ்வியலை வெற்றிகொள்வோம் –ஈ.பி.டி.பியின் தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம்!
கிளினிக் சேவையூடாக மருந்துகளை பெறும் நோயாளர்களுக்கு யாழ் போதனா வைத்தியசாலை விடுத்துள்ள அவசர அறிவித்த...
|
|