யாழ்ப்பாணம் பிரதான பொலிஸ் நிலையத்தில் வருடாந்த பரிசோதனை நிகழ்வு!

Saturday, November 19th, 2022

யாழ்ப்பாணம் பிரதான  பொலிஸ் நிலையத்தின் வருடாந்த பரிசோதனை நிகழ்வு, யாழ்ப்பாண பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தலைமையில் இடம்பெற்றது.

பொலிஸ்மா அதிபரின் பணிப்புரையின் கீழ் இலங்கையில் உள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் வருடாந்த பொலிஸ் பரிசோதனை நிகழ்வு நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் இடம் பெற்று வரும் நிலையில்

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இன்றைய தினம் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் வருடாந்த பொலிஸ் நிலைய பரிசோதனை நிகழ்வு இன்று காலை சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது

யாழ்ப்பாண மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் உஜித் என்.பி.லியனகே மற்றும்  யாழ்ப்பாண  பொறுப்பான உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.எஸ்.எம் ஐரூல் ஆகியோர், விருந்தினர்களாக பங்கேற்று, பரிசோதனைகளை முன்னெடுத்தனர்.

இதன் போது, பொலிஸ் அணிவகுப்பு, வாகன பரிசோதனை, பொலிஸாருக்கான விஷேட வகுப்பு உள்ளிட்ட நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

தமக்கான குடிநீரை பெற்றுத்தருமாறு நாச்சிக்குடா ஜேம்ஸ்புரம் பகுதி மக்கள் பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் ...
மீண்டும் பயங்கரவாதத்தை தலைதூக்கச் செய்ய புலம்பெயர் தரப்பு முயற்சி - பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரத...
மத்திய வங்கியால் அங்கீகாரமளிக்கப்பட்ட வங்கியொன்றில் குறைந்தது 100,000 அமெரிக்க டொலர்களை வைப்பிலிடும்...