யாழ்.மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக ஆர்.எஸ்.தமிந்த பதவியேற்பு!

Tuesday, April 2nd, 2019

யாழ்ப்பாண மாவட்டத்தின் பிரதிப் பொலிஸ் மா அதிபராக கடமையாற்றிய பாலித பெர்னாண்டோ, கடந்த மாதம் ஓய்வு பெற்றுச் சென்ற நிலையில் அவரது ஓய்வுக்குப் பின் யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக ஆர்.எஸ்.தமிந்த நியமிக்கப்பட்டுள்ளார்.

பொலிஸ் தலைமையகத்தில் பொலிஸ் நலன்புரிப் பிரிவுக்குப் பொறுப்பாகவிருந்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஆர்.எஸ்.தமிந்த, இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள பிரதிப் பொலிஸ்மா அதிபர் அலுவலகத்தில் நேற்று மாலை பதவியேற்பு இடம்பெற்றது. சமய வழிபாடுகளைத் தொடர்ந்து மதத் தலைவர்களின் ஆசியுடன் வைபவரீதியாக மாலை 3.50 மணியளவில் பிரதி பொலிஸ்மா அதிபர் தனது கடமைகளை பொறுப்பேற்றார்.

Related posts:

பல்கலைக்கழக மாணவர்கள் பாவம் ஏமாற்றப்பட்டு விட்டார்கள் – வடமாகாண முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் தவராசா!
தமிழ் மக்களை பாதுகாக்கும் நோக்கம் புலம்பெயர் தமிழ் அமைப்புக்களுக்கு இருக்குமானால் வெறுமனே கத்திக் கொ...
இலங்கையின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்கப்படும் - ஆசிய அபிவிருத்தி வங்...