பட்டம் பறக்கவிட புதிய கட்டுப்பாடு!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2019/08/download-3-11.jpg)
நாட்டிலுள்ள சர்வதேச மற்றும் உள்ளக விமான நிலையங்களை அண்மித்த பகுதிகளில், 5 கிலோமீற்றர் வரையான உயரத்திற்கு பட்டங்களைப் பறக்கவிடுவது சட்டவிரோதமானதும் தண்டனைக்குரிய குற்றமுமாகும் என கட்டுநாயக்க விமான நிலையத்தின் முகாமையாளர் H.S. ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம், மத்தளை மஹிந்த ராஜபக்ஸ விமான நிலையம், இரத்மலானை, பலாலி, சிகிரியா, கொக்கல உள்ளிட்ட விமான நிலையங்களுக்கும் இந்த நடைமுறை செல்லுபடியாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த விமான நிலையங்களை அண்மித்த பகுதிகளிலிருந்து விடப்படும் பட்டங்கள் மற்றும் நூல், ஜெட் விமானங்களின் எஞ்சின்கள் உள்ளிட்ட விமானங்களின் பாகங்களில் சிக்குண்டு விமான விபத்துக்கள் ஏற்படக்கூடும் என கட்டுநாயக்க விமான நிலையத்தின் முகாமையாளர் H.S. ஹெட்டியாரச்சி சுட்டிக்காட்டியுள்ளார்.
Related posts:
மின்கட்டண பட்டியலுக்கு பதிலாக வருகின்றது Smart meter !
உள்ளூராட்சி மன்ற தேர்தல் 2018 : தற்போதைய நிலவரம்!
சந்தேக நபர்களை துரத்திப் பிடிக்கச் சென்ற பொலிஸ் உத்தியாகத்தர் புது ஐயங்குளத்தில் சடலமாக மீட்பு!
|
|