கொழும்பில் திடீரென மயங்கி விழுந்தவர் உயிரிழப்பு – பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி

Wednesday, April 29th, 2020

கொழும்பின் புறநகர் பகுதியில் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த நபருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

பிலியந்தலையை சேர்ந்த 82 வயதான நபர் ஒருவர் சுகயீனம் அடைந்த நிலையில் நேற்றுமுன்தினம் ஜயவர்தனபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இந்நிலையில் அவருக்கு நடத்திய பி சி ஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனால் அவரின் உடல் இன்று உடஹமுல்ல பொது மயானத்தில் தகனம் செய்யப்படவுள்ளது.

ஆனாலும் குறித்த மரணம் கொரோனா தாக்கம் என இனங்காணப்பட்டுள் நிலையில் சுகாதார அமைச்சு  அதை உறுதிப்படுத்தாததுடன், தமது உத்தியோகபூர்வ இணைத்தளத்தில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்கள்  7 பேர் என்றே பதிவிட்டிருப்பகது குறிப்பிடத்தக்கது.

Related posts: